News March 20, 2024

இதுபோன்ற ஒரு வீரரை கிரிக்கெட்டில் பார்ப்பது கடினம்

image

ஆர்சிபி அணியின் வைஷாக் விஜய்குமார் மிகச் சிறப்பாக பவுலிங் செய்வதாக இந்திய வீரர் அஷ்வின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், தமிழ்நாடு-கர்நாடகா அணிகளுக்கு ரஞ்சி போட்டியில், வைஷாக் விஜய்குமார் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். உயிரை கொடுத்து விளையாடு வீரராக அவர் தெரிகிறார். அவருக்கு ஐபிஎல் போட்டி அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கியதாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Similar News

News October 28, 2025

புது Dress வாங்குன உடனேயே இந்த தவறை பண்ணாதீங்க!

image

புதிய ஆடைகளை வாங்கிய உடன் அணிந்தால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். நீங்கள் வாங்கிய ஆடையை வேறொருவர் ட்ரையல் பார்த்திருக்கலாம். அவர்களின் வியர்வை ஆடையில் பட்டிருக்கும். இதை அப்படியே நாம் ஒருநாள் முழுவதும் அணிந்திருந்தால் Rashes, allergy போன்ற சருமப் பிரச்னைகள் வரலாம். இதனால் புதிய ஆடைகளை துவைத்து, வெயிலில் காயப்போட்ட பின்பு அணிவது நல்லது. விழிப்புணர்வுக்காக SHARE.

News October 28, 2025

BREAKING: தவெகவில் புதிய குழு அமைத்தார் விஜய்

image

கரூர் துயரினால் முடங்கியிருந்த விஜய், தற்போது கட்சிப் பணிகளை துரிதப்படுத்தியுள்ளார். இந்த நிலையில், தவெக அன்றாடப் பணிகளையும், செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க புதிய நிர்வாகக் குழுவை அவர் நியமித்துள்ளார். N.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, CTR நிர்மல் குமார் உள்ளிட்ட 28 பேர் அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவிற்கு தவெக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

News October 28, 2025

ஒரே போட்டியில் 8 விக்கெட்.. BCCI-க்கு ஷமி பதிலடி

image

சர்வதேச போட்டிகளில் தன்னை அணியில் தேர்ந்தெடுக்காததற்கு, ஷமி உள்ளூர் போட்டியில் பதிலடி கொடுத்து வருகிறார். ரஞ்சி டிராபியில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில், முதல் இன்னிங்ஸில் 3, 2-ம் இன்னிங்ஸில் 5 என 8 விக்கெட்களை அவர் கைப்பற்றியுள்ளார். இதனால், அவரது பெங்கால் அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரஞ்சி டிராபியில் இதுவரை 2 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்களை ஷமி கைப்பற்றியுள்ளார்.

error: Content is protected !!