News November 11, 2024

மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியர்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி இன்று (11.11.2024) பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Similar News

News August 16, 2025

விழுப்புரம்: 10th போதும்! சூப்பரான அரசு வேலை! நாளையே கடைசி

image

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் காலியாக உள்ள 4,987 காலிப்பணியிடகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். 18-27 வயது உடையவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.21,700 முதல் 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து நாளைக்குள் விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க. வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.

News August 16, 2025

விழுப்புரம்: செல்போன் தொலைந்து விட்டால் இனி கவலை வேண்டாம்!

image

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<> இணையத்தில்<<>> செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை உள்ளிட்டு புகார் அளிக்கலாம். இதில் புகாரளித்தால் முதலில் செல்போன் செயலிழக்க செய்யப்படும். பின் செல்போனை டிரேஸ் செய்து கண்டறிந்து மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதன் மூலம் 5 லட்சம் மொபைல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News August 16, 2025

விழுப்புரத்தில் விதிமுறையை மீறிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை

image

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், சுதந்திர தின விழாவான விடுமுறை தினத்தில் ஊழியர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் அல்லது மாற்று விடுமுறை அளிக்காமல் பணிக்கு அமர்த்திய 65 நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் மீனாட்சி நடத்திய ஆய்வில், விதிமீறலில் ஈடுபட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

error: Content is protected !!