News November 11, 2024
மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர்

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (நவ.11) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்துக் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வின் போது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Similar News
News November 13, 2025
சேலம் வழியாக செல்லும் ரயிலில் கூடுதல் பெட்டிகள்!

சேலம் வழியாக இயக்கப்படும் கோவை-கேஎஸ்ஆர் பெங்களூரு-கோவை உதய் எக்ஸ்பிரஸ் டபுள் டக்கர் ரயிலில் [22666/22665] கூடுதலாக ஒரு ஏசி LHB பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் ஜனவரி 20- ஆம் தேதி முதல் மே 19- ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல், கோடை விடுமுறை உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
News November 12, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (நவ.12) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News November 12, 2025
சேலம்: இளநிலை உதவியாளர்களுக்கு பதிவு உயர்வு!

சேலம் ஊரக வளர்ச்சி அழகில் உதவியாளர் நிலையில் இருந்த ஊர் நல அலுவலர் அருண் ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி வீடு கட்டும் திட்டத்திற்கும், பிரியதர்ஷினி காடையாம்பட்டி ஒன்றியத்தில் தணிக்கை பிரிவுக்கும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி பிறப்பித்தார்.


