News March 20, 2024

இ-ஸ்கூட்டர்களின் விலை உயரும்!

image

ஏப்ரல் 1 முதல் இ-ஸ்கூட்டர்களின் விலை 10% வரை உயரும் என்று கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சியான ICRA தெரிவித்துள்ளது. இதற்குக் காரணம், எலக்ட்ரிக் மொபிலிட்டி ஊக்குவிப்புத் திட்டம்-2024இன் காலம் இம்மாதத்துடன் முடிவடைகிறது. இத்திட்டத்தின் கீழ் பைக்குகளுக்கு ரூ.5,000 – ரூ.10,000 வரை மானியம் வழங்கப்பட்டுவருகிறது. தற்போது இந்த காலக்கெடு முடிவடைவதால் பைக் தயாரிப்பு நிறுவனங்கள் விலையை உயர்த்தும் எனத் தெரிகிறது.

Similar News

News September 8, 2025

Parenting: குழந்தைகளிடம் இப்படி சொல்லுங்க; கேட்டுப்பாங்க

image

பெற்றோர்களே, குழந்தைகள் கேட்கும் அனைத்திற்கும் நீங்கள் ’NO’ என சொன்னால் அது அவர்களை விரக்திக்கு உள்ளாக்கும். இதனால் ’NO’ என சொல்வதற்கு பதிலாக இந்த முறைகளை நீங்கள் கையாளலாம். ➤அவர்கள் கேட்பதை கொடுக்கமுடியவில்லை என்றால், அதற்கு பதிலாக வேறு விஷயத்தை கொடுங்கள் ➤அவர்களது கவனத்தை திசைத்திருப்ப முயற்சியுங்கள் ➤’NO’ சொல்வதற்கான காரணத்தை விளக்குங்கள் ➤பொய்களை கூற வேண்டாம். SHARE.

News September 8, 2025

BREAKING: முடிவை மாற்றினார் செங்கோட்டையன்!

image

ஹரித்வார் போகவே டெல்லி செல்வதாகவும், பாஜக தலைவர்களை சந்தித்து பேசப் போவதில்லை என்றும் தெரிவித்த செங்கோட்டையன் தனது முடிவை தடாலடியாக மாற்றியுள்ளார். டெல்லியில் முகாமிட்டுள்ள அவர், அமித்ஷாவை சந்தித்துள்ளார். அதில், அதிமுகவை ஒருங்கிணைப்பது தொடர்பாக அவரிடம் செங்கோட்டையன் பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அதிமுகவில் மறுபடியும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்து என்ன நடக்குமோ?

News September 8, 2025

நாளை துணை ஜனாதிபதி தேர்தல்

image

துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நாளை (Sep 9) நாடாளுமன்றத்தில் நடைபெறும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அதன்பின் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, முடிவு அறிவிக்கப்படும். து.ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் கல்லூரியில் ராஜ்யசபா MP-கள் 238 பேர், லோக்சபா MP-கள் 542 பேர் உள்பட மொத்தம் 781 MP-கள் வாக்களிப்பர். குறைந்தது 391 வாக்குகள் பெறுபவர் வெற்றிபெறுவார்.

error: Content is protected !!