News November 11, 2024
மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் குளிக்க அனுமதி

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவி சுற்றுலாப் பயணிகளின் முக்கிய மையமாக உள்ளது. இங்கு விடுமுறை நாட்களில் அதிக அளவில் மக்கள் வந்து குளிக்கின்றனர். இதனிடையே கடந்த 10 நாட்களாக அருவியில் நீர்வரத்து மிக அதிகமாக இருந்தது. இதன் காரணமாக இந்த அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். கடந்த 2 நாளாக மழை பெய்யாத நிலையில் மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 9, 2025
நெல்லை: அண்ணன் – தம்பிக்கு அரிவாள் வெட்டு

அம்பை சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த சகோதர்கள் விக்னேஷ் (30), சந்தோஷ் (26). இருவரும் நேற்று சேரன்மாதேவியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளனர். டாஸ்மாக்கில் இருந்து இருவரும் கிளம்பும் போது ஒரு டூவீலரில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென விக்னேஷை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்றனர். இதை தடுக்க சென்ற சந்தோஷ்க்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இச்சம்பவம் குறித்து சேரன்மாதேவி போலீஸார் விசாரிக்கின்றனர்.
News December 9, 2025
நெல்லை: ரேஷன் கடை திறந்து இருக்கா? CHECK பண்ணுங்க!

நெல்லை மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை… இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க..
News December 9, 2025
நெல்லை: தாய் கொலை வழக்கில் மகனுக்கு மிரட்டல்!

சிவந்திப்பட்டி நொச்சிகுளத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (39). 2020-ல் இவரது தாய் மாரியம்மாளை சொத்து பிரச்னையால் உறவினர் மைனர்முத்து (43) கொலை செய்ததாக வழக்கு நிலுவையில் உள்ளது. இதில் ஆறுமுகம் முக்கிய சாட்சியாக உள்ளார். சில தினங்களுக்கு முன் ஆறுமுகம் வீட்டுக்கு வந்த மைனர்முத்து, “கோர்ட்டுக்குப் போய் சாட்சி சொல்லக்கூடாது” என அரிவாள் காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். போலீசார் மைனர் முத்துவை கைது செய்தனர்.


