News November 11, 2024
செங்கல்பட்டு அருகே விபத்தில் மரணம்

காட்டாங்குளத்தூர் கன்னியம்மன் கோவில் தெருவை சார்ந்தவர் விஜயா ஆனந்த் (35) நேற்று இரவு 8:40 மணிக்கு ஜிஎஸ்டி சாலையில் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது பாண்டிச்சேரி நோக்கி சென்ற கார் ஒன்று இவர் பைக் மீது மோதியது. இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரவு 9 மணிக்கு உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய பாண்டிச்சேரியை சார்ந்த எபினேசர் (47) கைதானார்.
Similar News
News August 9, 2025
செங்கல்பட்டு: உங்களுடன் ஸ்டாலின் முகாம் விபரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் தாம்பரம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி, காட்டாங்குளத்தூர், திருப்போரூர், செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதிகளில் நடைபெற உள்ளது. முழுமையான முகவரியை தெரிந்து கொள்ள இங்கு <
News August 8, 2025
செங்கல்பட்டின் ஆன்மீக ட்ரெக்கிங் ஸ்பாட்

செங்கல்பட்டு மாவட்டம் பழவேலி அருகே உள்ளது குபேரகிரி மலை. மலைக்கு மேலே மகாகாளிங்கராய ஈஸ்வரர் கோயில் உள்ளது. மலை உச்சியில் சிறிய சிவலிங்கம் மட்டும் உள்ள நிலையில், மலையின் உச்சியில் இருந்து அழகான காட்சியுடன் ஒரு அற்புதமான மலையேற்ற அனுபவம் தரும் கோயிலாக இது உள்ளது. மக்கள் இங்கு கிரிவலம் செல்கின்றனர். ட்ரெக்கிங் போக நல்ல இடம். மிஸ் பண்ணாம போயிட்டு வாங்க. ஷேர் பண்ணுங்க
News August 8, 2025
கரும்பு நடவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

மதுராந்தகம் சர்க்கரை ஆலைக்கு 2025-26 பருவத்தில் கரும்பு நடவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.7,450 மானியம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். அகலபாருடன் கூடிய பரு சீவல் நாற்று நடவுக்கு இந்த மானியம் வழங்கப்படும். 2024-25ம் ஆண்டு 937 விவசாயிகளுக்கு ரூ.2.44 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. விவசாயிகள் கரும்பு நடவிற்கு முன்வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.