News November 11, 2024
இந்திக்கு தருவதுபோல், தமிழுக்கும் பரிசு கொடுங்க

இலங்கையில் தமிழில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு திருமா கடிதம் எழுதியுள்ளார். இலங்கையின் சப்ரகமுவ பல்கலை.,யில் இந்தியில் முதல் மதிப்பெண் பெறும் மாணவருக்கு தங்கப் பதக்கமும் ₹25,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படுவதுபோல், தமிழில் முதல் மதிப்பெண் பெறும் மாணவருக்கும் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News August 13, 2025
17 வயது பள்ளி மாணவி கர்ப்பம்: கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

கோவை: காரமடைப் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இங்கு அவரது உறவினரான 17 வயது மாணவனும் படித்து வருகிறார். இந்தநிலையில் இருவரும் நெருங்கிப் பழகியதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி 6 மாத கர்ப்பமாகியுள்ளார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில், மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மாணவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News August 13, 2025
மோடி ஜி.. ரோடு சரியில்ல… லெட்டர் எழுதிய சுட்டி!

பெங்களூருவின் டிராபிக்கால் மக்கள் கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். இதுகுறித்து 5 வயது சிறுமி ஒருவர், PM மோடிக்கு லெட்டர் எழுதி இருக்கிறார். அதில், ‘மோடி ஜி, ஓவர் டிராபிக்கால் ஸ்கூலுக்கும் ஆபிஸுக்கும் லேட்டாக போகிறோம், ரோடு மோசமாக இருக்கு. ஹெல்ப் பண்ணுங்க’ என எழுதியுள்ளார். இந்த லெட்டர் வைரலாக, PM மோடி இதற்கு என்ன செய்ய போகிறார்? என நெட்டிசன்கள் வினவி வருகின்றனர்.
News August 13, 2025
நகை கடன் எந்த இடத்தில் எவ்வளவு கிடைக்கும்?

RBI வழிகாட்டுதலின்படி வங்கிகள், நிதி நிறுவனங்கள் நகை கடன் வழங்குகின்றன. ₹1 லட்சம் மதிப்புள்ள தங்க நகைக்கு நிதி நிறுவனங்கள் ₹75,000 வரை (75%) கடன் வழங்கும். ஆனால், அங்கு வட்டி அதிகம் (12 – 24%). பொதுத்துறை வங்கிகள் சற்று குறைவாக ₹60,000 – ₹70,000 வரை கடன் வழங்கும். ஆறுதல் என்னவென்றால் அங்கு வட்டி விகிதம் குறைவாக (7.25 – 9%) இருக்கும். தேவையை பொறுத்து தேர்வு செய்யுங்கள் நண்பர்களே! SHARE IT.