News November 11, 2024

நெல்லை வழியாக ஈரோடு வரை மீண்டும் பயணிகள் ரயில் சேவை!

image

செங்கோட்டையில் இருந்து தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பை, கல்லிடை, சேரன்மகாதேவி, நெல்லை, மணியாச்சி, கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர், மதுரை வழியாக ஈரோடு வரை இயக்கப்பட்ட பயணிகள் ரயில் பராமரிப்பு காரணமாக சில வாரங்கள் ரத்து செய்யப்பட்டது. இந்த ரயில் தற்போது மீண்டும் இயங்க தொடங்கியுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. SHARE IT.

Similar News

News December 7, 2025

நெல்லை: தாய் இறந்த துக்கம் தாளாமல் மகன் தற்கொலை

image

விகேபுரம் அருகே சிவந்திபுரத்தை சேர்ந்த ஐடி ஊழியர் வேலாயுதம் (25). தாய் அமுதவள்ளியை இழந்து மனமுடைந்த அவர், மது பழக்கத்திற்கு அடிமையானார். இந்நிலையில், நேற்று வீட்டில் துர்நாற்றம் வீசியதால், விகேபுரம் போலீசார் கதவை உடைத்து சென்ற போது, வேலாயுதம் மின் விசிறியில் தூக்கிட்டு அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தாய் இறந்த சோகத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News December 7, 2025

நெல்லை: இனி வரிசைல நிக்காதிங்க.. எல்லாமே ONLINE!

image

நெல்லை மக்களே, இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு போய் நீண்ட நேரம் வரிசைல நின்னு காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இனி நீங்க இங்கு <>க்ளிக்<<>> செய்து வீட்டில் இருந்தபடியே உங்க வரிகளை செலுத்தவும் முடியம், குறையை புகார் செய்யவும் முடியும்.. மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த உடனே SHARE பண்ணுங்க

News December 7, 2025

நெல்லை: இளைஞரிடம் ரூ.24 லட்சம் நூதன மோசடி

image

நெல்லை சந்திப்பு பகுதியை சேர்ந்த விஜயசுந்தர் (30), மேட்ரிமோனி தளத்தில் அறிமுகமான அகல்யா சேகர் மூலம் ஆன்லைன் டிரேடிங்கில் ஈடுபட்டு முதலில் ரூ.10,000 முதலீடு செய்து லாபம் ஈட்டியுள்ளார். இந்த நம்பிக்கையில் அடுத்தடுத்து ரூ.24.05 லட்சம் செலுத்தினார். பணத்தை திரும்ப எடுக்க முயலும்போது மேலும் பணம் கேட்டதால் ஏமாற்றம் அடைந்து நெல்லை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!