News November 11, 2024
கைதான துணை நடிகையின் பரபரப்பு வாக்குமூலம்!

சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக <<14570010>>கைதான துணை நடிகை<<>> மீனா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சின்னத்திரை, வெள்ளித்திரையில் ஜொலிக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என்றும், ஆனால் சிறிய வேடங்கள் மட்டுமே தனக்கு கிடைத்ததாகவும் கூறியுள்ளார். இதனால், விரைவில் செட்டிலாக நினைத்து துணை நடிகைகளுக்கு போதைப் பொருள் விற்பனை செய்யும் தொழிலை தொடங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 7, 2025
குழந்தைகளுக்கு ஆபத்து.. இதை செய்யவே கூடாது!

குழந்தை பிறந்த ஒருசில வாரங்கள் வரை அவர்களுக்கு தொப்புள் கொடியின் ரணம் ஆறாமல் இருக்கும். அதன்மூலம் அவர்களுக்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. எனவே தொப்புளை ஈரமாக வைத்திருக்காதீர்கள். டயப்பர் மாட்டும்போது தொப்புள் மீது உரசாமல் பார்த்துக்கொள்ளுங்கள் தொப்புள் கொடி சிவந்து போய் இருந்தாலோ, துர்நாற்றம் வீசினாலோ அலட்சியம் வேண்டாம். உடனடியான டாக்டரை அணுகுங்கள். SHARE.
News December 7, 2025
இதற்கு அண்ணாமலை ஆவண செய்வாரா? பெ.சண்முகம்

திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கானது என அண்ணாமலை கூறியிருந்தார். இந்நிலையில், இந்துக்கள் என்பது அனைத்து இந்துக்களுக்கு மட்டுமா (அ) குறிப்பிட்ட சாதி இந்துக்களுக்குமா என CPM பெ.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்துக்கள் என்று சொல்லி எத்தனை காலத்துக்கு ஏமாற்றி பிழைப்பீர்கள் என்றும் சாடியுள்ளார். கருவறைக்குள் பட்டியலின இந்துக்கள் பூஜை செய்ய அண்ணாமலை ஆவண செய்வாரா என்றும் சண்முகம் கேட்டுள்ளார்.
News December 7, 2025
கள்ளக்காதல் என்ற ஒன்று இல்லை: சேரன்

பெண்ணைதான் காதலிக்க வேண்டும் என்று இல்லை, எந்த ஒரு உயிரின் மீது அன்பு வைத்தாலும் அது காதல்தான் என இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார். புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், காதலில் நல்ல காதல், கள்ளக்காதல் என்றெல்லாம் இல்லை எனவும் விளக்கம் கொடுத்தார். சமூகம் நம் மீது செலுத்தும் ஆதிக்கம்தான் கள்ளக்காதல் எனவும், யாரை காதலிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ காதலித்து விடுங்கள் என்றும் கூறியுள்ளார்.


