News November 11, 2024
ஆதாருடன் இதை சேத்துட்டீங்களா.. டிச.31 கடைசி!

போலி பான் கார்டுகள் மூலமாக பண மோசடி நடப்பதை தடுக்க, பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பல முறை இதற்கு அவகாசம் கொடுத்தும் கூட, இன்னும் பலர் இதை செய்யவில்லை. இந்நிலையில், வரும் டிச.31 இதற்கான கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலும் இணைக்காவிட்டால், பான் கார்டு ரத்தாகி விடும். அதை புதுப்பிப்பதும் கடினமான நடைமுறை என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News August 5, 2025
அனுபவம் சொல்லித்தரும் பாடம்

*உங்களால் எல்லாரையும், எல்லா நேரத்திலும் திருப்திப்படுத்த முடியாது *உங்கள் சுயமதிப்பானது உங்களை சார்ந்ததே. உங்களை பற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதல்ல *சிலர், சில சமயங்களில் கடுமையாக நடந்து கொள்வதற்கு நீங்கள் தான் காரணம் என்று நினைக்காதீர்கள். அவர்களின் சொந்தப் பிரச்சனையால் அவர்கள் அப்படி நடந்துகொள்ள நேரிட்டிருக்கலாம்…. உங்கள் அனுபவத்தில் நீங்கள் கற்றுக் கொண்டதை கமெண்ட்டில் பகிரலாமே?
News August 5, 2025
இந்தியா மீது வரியை உயர்த்துவேன்: டிரம்ப்

இந்தியப் பொருட்களுக்கு 25% வரி விதித்து டிரம்ப் அண்மையில் உத்தரவிட்டார். இந்நிலையில் வரி மேலும் உயர்த்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். ரஷியாவிடமிருந்து வாங்கும் எண்ணெயை திறந்த சந்தையில் அதிக லாபத்திற்கு இந்தியா விற்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் உக்ரைன் போர் குறித்து இந்தியாவுக்கு கவலையில்லை என்றும், இந்தியாவின் நடவடிக்கைக்காகவே அதன் மீதான வரியை உயர்த்துவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
News August 5, 2025
லெஜண்ட் இயக்குநருடன் சேரும் வாரிசு நடிகர்!

தக்லைஃப் படத்துக்கு பிறகு மணிரத்னம் இயக்கும் அடுத்தபடம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. காதல் திரைப்படங்களின் டிரெண்ட் செட்டரான மணிரத்னம் பட்டறையில் இப்போது இணைந்திருப்பது துருவ் விக்ரம் என்கிறார்கள். அவருக்கு ஜோடியாக லேட்டஸ்ட் சென்சேசன் ருக்மினி வசந்த் நடிப்பதாகவும் தகவல். வரும் செப்டம்பரில் ஷூட்டிங் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த காம்போ எப்படி இருக்கும்?