News November 10, 2024

ஆரணியில் 13 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல் 

image

ஆரணி டவுன் சத்தியமூர்த்தி விஷாலையில் ஜனார்த்தனன்(55) என்ற நபர் நடத்திவரும் கடையில் ராஜேஸ்வரி(57) என்பவர் வேலை செய்து வந்த நிலையில், ஜனார்த்தனன் அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி கடைக்கு மாணவியை அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். புகாரின் பேரில் இருவர் மீதும் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Similar News

News December 7, 2025

தி.மலை: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – APPLY NOW!

image

தி.மலை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!

News December 7, 2025

தி.மலை : B.E. முடித்தால் ரூ.1,40,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

தி.மலை மக்களே, ஏவுகனை மற்றும் பாதுகாப்பு உபகரனங்கள் தயாரிக்கும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 80 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 27 வயதுகுட்பட்ட B.E./ B. Tech, முதுகலை டிகிரி படித்தவர்கள் டிச 29க்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.40,000 – ரூ.1,40,000 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் ஆட்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News December 7, 2025

தி.மலை: தந்தை பெரியார் விருது பெற இவர்கள் விண்ணப்பிக்கலாம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள் தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம். வருகிற டிசம்பர் 18ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!