News November 10, 2024

கடல் நீர் புகாமலிருக்க தடுப்பு நடவடிக்கை

image

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி 1 ஆவது வார்டு மீனவர் நகரில் மழைக்காலங்களில் பெருக்கெடுக்கும் கடல் நீர் தாழ்வான பகுதிகள் வழியாக ஊருக்குள் புகும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதன்படி அப்பகுதியில் மணல் நிரப்பி தாழ்வான பகுதியின் மட்டம் உயர்த்தும் பணியை பேரூராட்சி தலைவர் ராஜா இன்று ஆய்வு செய்தார்.

Similar News

News December 8, 2025

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு மழை நீட்டிப்பு எச்சரிக்கை

image

வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்றி மற்றும் மன்னார் வளைகுடா காற்றழுத்தம் காரணமாக தென் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்திற்கு டிச-12-ம் தேதி வரை மழை நீடிக்கும் எனவும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வலியுறுத்தப் படுகிறது. தற்போது, இராமநாதபுரம் மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்கிறது.

News December 8, 2025

முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை

image

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் 2025-2026 கல்வியாண்டில் முதலாம் ஆண்டு தொழிற்கல்வியில் சேர்த்துள்ளவர்கள் கல்வி உதவித்தொகை அதிகளவில் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பித்து பயன்பெறுமாறு மேலும் விபரங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலத்தை நேரிலோ (அ) தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

News December 8, 2025

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு மழை நீட்டிப்பு எச்சரிக்கை

image

வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்றி மற்றும் மன்னார் வளைகுடா காற்றழுத்தம் காரணமாக தென் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்திற்கு டிச-12-ம் தேதி வரை மழை நீடிக்கும் எனவும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வலியுறுத்தப் படுகிறது. தற்போது, இராமநாதபுரம் மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்கிறது.

error: Content is protected !!