News November 10, 2024
தொழிலதிபர் மகன் போதையில் கீழே விழுந்து பலி

மதுரை பச்சரிசிக்கார தெருவில் பிளாஸ்டிக் பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வருபவர் வட மாநிலத்தைச் சேர்ந்த நிமிசந்த் ஜெயின். இவரது மகன் சஞ்சய் குமார் ஜெயினுக்கு(30) மதுப்பழக்கம் இருந்துள்ளது. இன்று(நவ.10) குடிபோதையில் மதுரை ரயில்வே ஸ்டேஷன் முன்பு தடுமாறி கீழே விழுந்து மயங்கினார். மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர் அங்கு பலியானார். திடீர்நகர் போலீசார் இதுகுறித்து விசாரிக்கின்றனர்.
Similar News
News August 20, 2025
மதுரை ஐகோர்டில் வேலை.. உடனே APPLY பண்ணுங்க.!

மதுரை மக்களே, உயர்நீதிமன்றத்தில் ASSISTANT PROGRAMMER பணியிடங்களுக்கு 41 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் சார்ந்த ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வரும் செப். 9க்குள் <
News August 20, 2025
மதுரை தவெக மாநாடு: டாஸ்மாக் கடைகள் அடைக்க உத்தரவு

மதுரையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் மாநில மாநாடு நடைபெறுவதை ஒட்டி திருப்பரங்குன்றம் வட்டத்தில் 14 டாஸ்மாக் கடைகள் அடைக்க என மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உத்தரவு. கூடக்கோவில், மேல உப்பிலிக்குண்டு சந்திப்பு, திருமங்கலம் உசிலம்பட்டி சந்திப்பு உள்ளிட்ட 10 டாஸ்மாக் கடைகள் மற்றும் 4 தனியார் மதுபான விடுதிகளை ஆகஸ்ட் 21ஆம் தேதி அடக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
News August 20, 2025
BREAKING:மதுரை தவெக மாநாடு -பேனர் வைப்பதில் ஒருவர் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தவெக மாநாட்டிற்காக பேனர் வைக்கும்போது மின்சாரம் பாய்ந்து 19 வயது மாணவன் உயிரிழந்தார். நாளை தமிழக வெற்றி கழத்தின் 2 வது மாநில மாநாடு மதுரை பாரப்பத்தியில் நடைபெறவுள்ளது. இதற்காக விருதுநகர் மாவட்டம் இனாம்கரிசல்குளத்தில் பேனர் வைக்கும் போது மின்சாரம் தாக்கி காளீஸ்வரன் என்ற இளைஞர் உயிரிழந்தார்.