News November 10, 2024

ரவுண்டான அமைத்து சோதனை ஓட்டம்

image

வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகே நான்கு சாலைகள் சந்திக்கும் பகுதியில் சிக்னல் செயல்படுத்தப்பட்டு வந்தது. இதன் காரணமாக அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.இந்த சூழ்நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அங்கு சிக்னல்கள் நேற்று இரவு முதல் அகற்றப்பட்டு ரவுண்டானாக அமைக்கப்பட்டது. இன்று (நவ.10) சோதனை ஓட்டம் நடைபெற்றது.

Similar News

News December 9, 2025

நெல்லை: ரேஷன் கடை திறந்து இருக்கா? CHECK பண்ணுங்க!

image

நெல்லை மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை… இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க..

News December 9, 2025

நெல்லை: தாய் கொலை வழக்கில் மகனுக்கு மிரட்டல்!

image

சிவந்திப்பட்டி நொச்சிகுளத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (39). 2020-ல் இவரது தாய் மாரியம்மாளை சொத்து பிரச்னையால் உறவினர் மைனர்முத்து (43) கொலை செய்ததாக வழக்கு நிலுவையில் உள்ளது. இதில் ஆறுமுகம் முக்கிய சாட்சியாக உள்ளார். சில தினங்களுக்கு முன் ஆறுமுகம் வீட்டுக்கு வந்த மைனர்முத்து, “கோர்ட்டுக்குப் போய் சாட்சி சொல்லக்கூடாது” என அரிவாள் காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். போலீசார் மைனர் முத்துவை கைது செய்தனர்.

News December 9, 2025

நெல்லை: மயங்கி விழுந்த விவசாயி பலி

image

நெல்லை, திருப்பணிகரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி வெள்ளத்துரை (50). இவருக்கு நீண்ட நாட்களாக இதய நோய் இருந்து வந்தது. நேற்று தனது வயலுக்கு சென்ற போது திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!