News November 10, 2024
BREAKING: எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் காலமானார்

பிரபல எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் (66) இன்று காலமானார். மதுரையில் உள்ள இல்லத்தில் குளியலறையில் அவர் வழுக்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்து அவர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. மர்ம தேசம், விடாது கருப்பு போன்ற மர்ம நாவல்கள், சிறுகதைகள், படங்களுக்கு வசனங்கள் எழுதியவர் இந்திரா செளந்தர ராஜன். அவரின் மறைவுக்கு எழுத்தாளர்கள், அவருடைய வாசகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News December 7, 2025
BREAKING: விஜய், செங்கோட்டையனுக்கு அதிர்ச்சி

ஈரோட்டில் டிச.16-ல் விஜய் பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. ஈரோடு பவளத்தாம்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான 7 ஏக்கர் இடத்தில் 75 ஆயிரம் பேர் வந்து, செல்லும் வகையில் பொதுக்கூட்டம் நடத்த செங்கோட்டையன் இன்று அனுமதி கேட்டிருந்தார். இந்நிலையில், இடம் சிறியதாக இருப்பதாக கூறி, தவெக கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இது, விஜய், செங்கோட்டையனுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
News December 7, 2025
திருமணத்தை நிறுத்திய ஸ்மிருதி மந்தனா!

தனது திருமணம் நின்றுவிட்டதாக ஸ்மிருதி மந்தனா அறிவித்துள்ளார். இதுகுறித்த அறிக்கையை வெளியிட்டுள்ள அவர், இந்த விவகாரத்தை தான் இத்துடன் முடிக்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார், அனைவரும் அவ்வாறே நடந்து கொள்ளும் படியும் கேட்டுக் கொண்டுள்ளார். இனி இந்தியாவுக்காக கிரிக்கெட்டில் மேலும் பல கோப்பைகளை வெல்ல நினைப்பதாக பதிவிட்டுள்ள அவர், இனி அதிலேயே தனது கவனம் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
News December 7, 2025
பணம் கொடுத்தார் ஸ்டாலின்.. அனைவரும் இத செய்யுங்க

கொடிநாளையொட்டி சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவிடம் CM ஸ்டாலின் நிதியளித்தார். இதுகுறித்து அவரது X பக்கத்தில், மக்கள் பாதுகாப்பாக வாழ உயிரைத் துச்சமாக எண்ணி காவல் காக்கும் படை வீரர்களின் பணி ஈடு இணையற்றது. தியாகத் தீரர்களின் மறுவாழ்வுக்கும், அவர்களின் குடும்ப நலுனுக்கும் அனைவரும் கொடிநாள் நிதியளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னதாக PM மோடியும் நிதியளித்துள்ளார்.


