News November 10, 2024
தஞ்சையில் பெயர் பதிவு செய்ய கடைசி வாய்ப்பு

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பிறந்தவர்கள் பிறப்புச் சான்றிதழில் தங்களது பெயரைச் சேர்க்க டிச.31ஆம் தேதி கடைசி நாளாகும். அதன் பின்னர் பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்ய இயலாது. ஏற்கனவே பிறப்புச் சான்றிதழ் பெற்று அலுவலகத்தை அணுகி தங்களது பெயரை விண்ணப்பித்து பெயர் பதிவேற்றம் செய்து கொள்ளுமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News December 8, 2025
தஞ்சை: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன் உதவி

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் tabcedco.net என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News December 8, 2025
தஞ்சை: திருமணத்தில் நகை திருடிய நபர் கைது

திருவாரூரை சார்ந்த பாஸ்கர் தனது சகோதரி மகளின் திருமணத்திற்காக தஞ்சாவூரில் நடைபெறும் திருமணத்திற்கு தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். திருமண மண்டபத்தில் வைத்திருந்த அரை பவுன் நகை மற்றும் ரூ.80 ஆயிரம் ரொக்கம் அடங்கிய பையை காணவில்லை. இது குறித்து கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, காவல்துறையினர் விசாரணையில் கோவில்வெண்ணியைச் சேர்ந்த புருஷோத்தமனை கைது செய்து, நகை, பணத்தை மீட்டனர்.
News December 8, 2025
தஞ்சை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆடுதுறை, தஞ்சை நகர், பேராவூரணி, அய்யம்பேட்டை, பூண்டி, மின் நகர் ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை ( டிச.9) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. மேலும் (டிச.10) வடசேரி மற்றும் ஈச்சங்கோட்டை துணைமின் நிலையங்களிலும் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. ஷேர் பண்ணுங்க


