News November 9, 2024

மதுரையில் 1630 மையங்களில் எழுத்தறிவுத்தேர்வு

image

மதுரையில் கடந்த மே மாதம் எழுதப்படிக்கத்தெரியாதோர் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இதில் மொத்தம் 27,735 பேர் எழுத படிக்க தெரியாதவர்களாக கண்டறியப்பட்டனர். இவர்களுக்கு கடந்த ஜீன்.15 முதல் 1630 எழுத்தறிவு மையங்களில் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் நவ.10 அன்று மதுரையில் உள்ள அனைத்து ஆரம்ப & நடுநிலைப்பள்ளிகளிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அடிப்படை எழுத்தறிவுத்தேர்வு நடைபெறவுள்ளது.

Similar News

News August 20, 2025

மதுரை ஐகோர்டில் வேலை.. உடனே APPLY பண்ணுங்க.!

image

மதுரை மக்களே, உயர்நீதிமன்றத்தில் ASSISTANT PROGRAMMER பணியிடங்களுக்கு 41 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் சார்ந்த ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வரும் செப். 9க்குள் <>இந்த இணையதள பக்கத்திற்கு<<>> சென்று இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும். டிகிரி முடித்து மதுரையிலே வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்யவும்.

News August 20, 2025

மதுரை தவெக மாநாடு: டாஸ்மாக் கடைகள் அடைக்க உத்தரவு

image

மதுரையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் மாநில மாநாடு நடைபெறுவதை ஒட்டி திருப்பரங்குன்றம் வட்டத்தில் 14 டாஸ்மாக் கடைகள் அடைக்க என மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உத்தரவு. கூடக்கோவில், மேல உப்பிலிக்குண்டு சந்திப்பு, திருமங்கலம் உசிலம்பட்டி சந்திப்பு உள்ளிட்ட 10 டாஸ்மாக் கடைகள் மற்றும் 4 தனியார் மதுபான விடுதிகளை ஆகஸ்ட் 21ஆம் தேதி அடக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

News August 20, 2025

BREAKING:மதுரை தவெக மாநாடு -பேனர் வைப்பதில் ஒருவர் பலி

image

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தவெக மாநாட்டிற்காக பேனர் வைக்கும்போது மின்சாரம் பாய்ந்து 19 வயது மாணவன் உயிரிழந்தார். நாளை தமிழக வெற்றி கழத்தின் 2 வது மாநில மாநாடு மதுரை பாரப்பத்தியில் நடைபெறவுள்ளது. இதற்காக விருதுநகர் மாவட்டம் இனாம்கரிசல்குளத்தில் பேனர் வைக்கும் போது மின்சாரம் தாக்கி காளீஸ்வரன் என்ற இளைஞர் உயிரிழந்தார்.

error: Content is protected !!