News March 20, 2024
தேசிய ஊரக வேலை நாள் எண்ணிக்கை உயர்த்தப்படும்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு நாள் எண்ணிக்கை 100-இல் இருந்து150-ஆக உயர்த்தப்படும் என திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ” வேலை நாள் எண்ணிக்கை 100-இல் இருந்து150-ஆக உயர்த்தப்படும். ஊதியமும் ரூ.400-ஆக உயர்த்தப்படும். ஜி.எஸ்.டி. சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News April 30, 2025
ரெட்ரோ கதை இதுதான்.. வெளியான டுவிஸ்ட்

வன்முறைகளைக் கைவிடுவதாக சபதம் ஏற்ற ஒரு கேங்ஸ்டர், தனது குடும்பத்தைப் பாதுகாக்க சபதத்தை மீறி வன்முறையைக் கையிலெடுக்கிறார், இந்த தமிழ் படம் ரத்தக்களரி மிகுந்தது என ரெட்ரோ படம் குறித்து பிரிட்டிஷ் திரைப்பட வாரியம் UK ரிலீஸையொட்டி தெரிவித்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் மே 1-ல் உலகெங்கும் வெளியாகவுள்ளது.
News April 30, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News April 30, 2025
ஏமாற்றினாரா அஜித்? வைரலாகும் நடிகையின் பதிவு

அஜித்தின் ஆரம்பகால பயணத்தில் நடிகை ஹீராவுடனான காதல் பேசுபொருளானது. இந்நிலையில், அந்த நடிகர் தன்னை காதலித்து ஏமாற்றியதாகவும், தவறான தகவலைக் கூறி தனது நற்பெயரை கெடுத்துவிட்டதாகவும் ஜனவரியில் வெளியான ஹீராவின் பதிவு, அஜித் பத்மபூஷன் விருது பெற்ற நாளன்று வைரலானது. ஆனால், இந்தப் பதிவில் அவர் அஜித் பெயரை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. இருப்பினும், இதற்கு பின்னால் சதி இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.