News November 8, 2024
விமான நிலையத்தில் உடைமைகளை பெறுவதில் தாமதம்

சென்னை விமான நிலையத்தில் துபாய் போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் கன்வேயர், பெல்ட் மூலம் பயணிகளுக்கு வந்து கிடைப்பதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதமாகிறது. இதனால், பயணிகள் கடும் அதிருப்தியடைந்தனர். இன்று அதிகாலை துபாயிலிருந்து வந்த பயணிகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேக்கேஜ்கள் கிடைக்காததால், சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Similar News
News August 9, 2025
மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டத்தில்,அரசு துவக்கபள்ளிகளில், 1ம்வகுப்பில் கடந்தாண்டு 7,227மாணவர்கள் சேர்ந்தநிலையில், இந்தாண்டு 6,073 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். துவக்கபள்ளிகள்481, அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளிகள் 83, நடுநிலைபள்ளிகள் 189, அரசு உதவி பெறும்நடுநிலை பள்ளிகள் 27 என் மொத்தம் 782 பள்ளிகள் உள்ளன. மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
News August 9, 2025
செங்கல்பட்டு: உங்களுடன் ஸ்டாலின் முகாம் விபரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் தாம்பரம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி, காட்டாங்குளத்தூர், திருப்போரூர், செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதிகளில் நடைபெற உள்ளது. முழுமையான முகவரியை தெரிந்து கொள்ள இங்கு <
News August 8, 2025
செங்கல்பட்டின் ஆன்மீக ட்ரெக்கிங் ஸ்பாட்

செங்கல்பட்டு மாவட்டம் பழவேலி அருகே உள்ளது குபேரகிரி மலை. மலைக்கு மேலே மகாகாளிங்கராய ஈஸ்வரர் கோயில் உள்ளது. மலை உச்சியில் சிறிய சிவலிங்கம் மட்டும் உள்ள நிலையில், மலையின் உச்சியில் இருந்து அழகான காட்சியுடன் ஒரு அற்புதமான மலையேற்ற அனுபவம் தரும் கோயிலாக இது உள்ளது. மக்கள் இங்கு கிரிவலம் செல்கின்றனர். ட்ரெக்கிங் போக நல்ல இடம். மிஸ் பண்ணாம போயிட்டு வாங்க. ஷேர் பண்ணுங்க