News November 8, 2024

சைபர் குற்றப் புகார் – கட்டணமில்லா எண்

image

சென்னை சைபர் கிரைம் போலீசார் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “ஆர்.பி.ஐ.யால் அங்கீகரிக்கப்படாத செயலில் மூலம் கடன் பெற வேண்டாம் என்றும், எச்சரிக்கையுடன் இருக்கும்படியும், இல்லையென்றால் மோசடி நபர்கள் உங்களுடைய புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, உங்களிடம் பணம் கேட்டு மிரட்டுவார்கள். அவ்வாறு நடந்தால், 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்” என அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News September 11, 2025

பூவை ஜெகன் மூர்த்தி கடத்தல் வழக்கு ஒத்திவைப்பு

image

சிறுவனை கடத்தியதாக பூவை ஜெகன்மூர்த்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி பெண்ணின் தந்தை வனராஜ் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில், தற்போது சமரசம் ஏற்பட்டு திருமண வரவேற்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக மனுதாரர் தரப்பு தெரிவித்தது வழக்கு விசாரணை செப்.17 ஒத்திவைக்கப்பட்டது.

News September 11, 2025

சென்னை: வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு

image

சென்னையில் வாகனங்களுக்கு விதிக்கப்படும் அபராதம் தொகையை செலுத்தினால் மட்டுமே இன்சுரன்ஸ் புதுபிக்க முடியும் என்ற புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது சென்னை மாநகர காவல்துறை. அபராத நிலுவை தொகை ரூ.300 கோடி நிலுவையில் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. வாகன பரிவாஹன் என அனைத்து இன்சூரன்ஸ் இணைந்து இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News September 11, 2025

சென்னையில் தூய்மை பணியாளர்களின் சம்பளம் உயர்வு

image

ராயபுரம் மற்றும் திருவி.க.நகர் பகுதிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் தினசம்பளத்தை உயர்த்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய உத்தரவின்படி பணியின் வகைபோல் தினசம்பளம் ரூ.761 முதல் ரூ.965 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் மாத வருமானம் சுமார் ரூ.19,700 முதல் ரூ.25,000 இருக்கும். ஊழியர்களுக்கு கட்டண விடுப்பு, காப்பீடு, மருத்துவ பரிசோதனை, பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவைகளும் வழங்கப்பட உள்ளன.

error: Content is protected !!