News November 8, 2024

கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

image

ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி கார்த்தி (33) என்பவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை (ஆயுள் தண்டனை) மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தால்  நேற்று தீர்ப்பு வழங்கியது. இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த காவலர்களுக்கு மாவட்ட எஸ்.பி. கிரண்ஸ்ருதி பாராட்டுகளை தெரிவித்தார்.

Similar News

News August 27, 2025

ராணிப்பேட்டை: கூட்டுறவு வேலைக்கு விண்ணபிப்பது எப்படி?

image

▶️ ராணிப்பேட்டை கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 45 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. ▶️சம்பளம் ரூ. 23,640 முதல் ரூ. 96,395 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ▶️விண்ணபிக்கhttps://www.drbrpt.in/index.php இணையதளத்திற்கு செல்ல வேண்டும். ▶️பெயர், பிறந்த தேதி, முகவரி, கல்வித்தகுதி, விண்ணப்பதாரரின் புகைப்படம், கையொப்பம் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். (SHARE பண்ணுங்க)

News August 27, 2025

ராணிப்பேட்டை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

image

தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் (Gig Workers Welfare Board) பதிவு செய்துள்ள 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதை பெற <>இங்கே<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 27, 2025

ராணிப்பேட்டை: மறக்காம.. இத பண்ணுங்க

image

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி ராணிப்பேட்டை சோளிங்கரில் உள்ள கமல விநாயகர் கோயிலில் இன்று காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள், மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் பூஜை செய்தால் துன்பங்கள், தடைகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும் என்பது ஐதீகம். ( விநாயகர் அருள் பெற SHARE பண்ணுங்க)

error: Content is protected !!