News March 20, 2024
தனியார் பள்ளி மீது பாய்ந்தது வழக்கு

பிரதமர் மோடி ரோடு ஷோவில் பள்ளி மாணவர்களை பங்கேற்கவைத்த தனியார் பள்ளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கோவையில் பிரதமர் மோடி கலந்துகொண்ட ரோடு ஷோவில் ஸ்ரீசாய்பாபா பள்ளியைச் சேர்ந்த 50 மாணவர்கள் கலந்துகொண்டனர். மாணவர்களுக்கு ராமர், சீதை வேடமிட்டு கழுத்தில் பாஜக கொடியுடன் பங்கேற்க வைத்தனர். இந்நிலையில், அந்த தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News October 22, 2025
நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா? அரசு புது உத்தரவு

மழை குறித்து ‘Red Alert’ எச்சரிக்கை விடுக்கப்பட்டால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதவிர அனைத்து வகைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் பருவமழை காலங்களில் ஏற்படும் இடர்பாடுகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை ஆசிரியர்கள் அறிவுரைகளை வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
News October 22, 2025
நெல்லுக்கான ஆதார விலை உயர்வு: சக்கரபாணி

திமுக ஆட்சியில் நெல்லுக்கான ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். கனமழை பெய்து வரும் நிலையில், தஞ்சை நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்த அவர், நெல்கொள்முதல் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார். குறைவான அளவே நெல் கொள்முதல் செய்யப்பட்டதாக EPS-ன் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், செப்., முதலே அதிக அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக கூறினார்.
News October 22, 2025
மஞ்சள், ஆரஞ்சு, ரெட் அலர்ட்; எதை குறிக்குது?

➤பச்சை: வானிலை பாதுகாப்பாக உள்ளது. அன்றாட நடவடிக்கைகளை தொடரலாம் ➤மஞ்சள்: வானிலை மோசமடைய வாய்ப்பு. மழையால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் ➤ஆரஞ்சு: போக்குவரத்து, மின்சாரம், தகவல் தொடர்பு போன்ற பொதுசேவைகள் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு ➤ரெட்: மிகவும் அபாயகரமான வானிலை. உயிருக்கும் உடைமைகளுக்கும் அச்சுறுத்தல். மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்பதை குறிக்கிறது. SHARE IT.