News March 20, 2024
ஹேமந்த் சோரனின் அண்ணி பாஜகவில் இணைந்தார்

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மறைந்த தலைவர் துர்கா சோரனின் மனைவியும், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் அண்ணியுமான சீதா சோரன் பாஜகவில் இணைந்துள்ளார். 3 முறை எம்எல்ஏவாக இருந்த சீதா, தனது கணவரின் மறைவை தொடர்ந்து கட்சியில் இருந்து தானும், குடும்பத்தாரும் ஒதுக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள ஹேமந்த் சோரன் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 22, 2025
10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. மத்திய அரசு பணி

மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் உள்ள Border Roads Organisation-ல் காலியாகவுள்ள 542 மெக்கானிக் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், அந்தந்த பதவிகளுக்கு ஏற்ப தொழிற்சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ₹20,200. விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.24. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
News October 22, 2025
நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா? அரசு புது உத்தரவு

மழை குறித்து ‘Red Alert’ எச்சரிக்கை விடுக்கப்பட்டால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதவிர அனைத்து வகைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் பருவமழை காலங்களில் ஏற்படும் இடர்பாடுகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை ஆசிரியர்கள் அறிவுரைகளை வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
News October 22, 2025
நெல்லுக்கான ஆதார விலை உயர்வு: சக்கரபாணி

திமுக ஆட்சியில் நெல்லுக்கான ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். கனமழை பெய்து வரும் நிலையில், தஞ்சை நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்த அவர், நெல்கொள்முதல் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார். குறைவான அளவே நெல் கொள்முதல் செய்யப்பட்டதாக EPS-ன் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், செப்., முதலே அதிக அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக கூறினார்.