News March 20, 2024

இதுவரை ரூ.5.37 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல்

image

தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்ததையடுத்து, காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நேற்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் ரூ.5.37 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ.4.37 கோடி ரொக்கம், ரூ.0.36 கோடி மதிப்பில் மதுபானங்கள், ரூ.0.25 கோடி மதிப்பில் போதைப்பொருட்கள், ரூ.0.20 கோடி மதிப்பில் இலவச பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Similar News

News November 8, 2025

பெரம்பலுர்: மாட்டுக் கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம் (2/2)

image

▶️கொட்டகை அமைக்க சொந்த இடம் இருக்க வேண்டும்.
▶️ ஏற்கெனவே மாடு வளர்த்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆடு கொட்டகை, கோழிக்கூண்டு மானியத் திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது.
▶️ விண்ணதாரர் 100 நாள் வேலை திட்டத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
▶️ இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க..

News November 8, 2025

X-Ray பிறந்த நாள் இன்று!

image

உடலை அறுக்காமலேயே, உள்ளே உள்ள பிரச்னைகளை எளிதாக கண்டறிய அதிகம் பயன்படுத்தும் ஒன்று X-Ray. நவ.8, 1895-ல், ஜெர்மானிய விஞ்ஞானி Wilhelm Conrad Rontgen இந்த கதிர்களை கண்டுபிடித்தார். கேத்தோடு கதிர்களை பரிசோதனை செய்தபோது, ஒரு கதிர் மட்டும் அட்டை வழியாக பாய்வதை கண்டார். தன் மனைவியின் கை எலும்புகளையே அவர் முதல் X-Ray படமாக பதிவு செய்தார். இதற்காக 1901-ல் அவர் இயற்பியலில் முதல் நோபல் பரிசை பெற்றார்.

News November 8, 2025

தாத்தாவானார் அன்புமணி

image

அரசியலில் இளைஞர் போல் ஆக்டிவ்வாக இருக்கும் பாமக தலைவர் அன்புமணி தாத்தாவும், செளமியா பாட்டியாகவும் அந்தஸ்து பெற்றுள்ளனர். ஆம்! அன்புமணியின் 2-வது மகள் சங்கமித்ராவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. சினிமா தயாரிப்பாளரான சங்கமித்ரா, கடந்த 2024 தேர்தலின்போது, செளமியாவுக்கு ஆதரவாக வீடுவீடாக பரப்புரை செய்து கவனத்தை ஈர்த்தவர். பாமகவின் அடுத்த அரசியல் வாரிசு இவர்தான் என பேச்சு அடிபடுவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!