News November 7, 2024

“பொதுமக்களின் மனுக்களை காகிதங்களாக பார்க்கக்கூடாது”

image

விழுப்புரம் அரசு அதிகாரிகள் கூட்டத்தில் துணை முதல்வர், “பொதுமக்களின் மனுக்களை காகிதங்களாக பார்க்காமல், கோரிக்கைகளில் உள்ள மக்களின் வாழ்க்கையாக பார்க்க வேண்டும். விழுப்புரம் மாவட்டம் கிராம ஊராட்சிகள் அதிகம் உள்ள மாவட்டமாகும். இங்கு விவசாயத்தையும், விவசாயம் சார்ந்த தொழில்களையும் செய்பவர்கள்தான் அதிகம். மக்கள் பணிகளை செய்வதை அரசு அலுவலர்கள் தங்களது முக்கிய கடமையாக மேற்கொள்ள வேண்டும்” என்று பேசினார்.

Similar News

News August 17, 2025

அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

image

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் வருகின்ற ஆக.22ம் தேதி இரவு 10:30 மணி அளவில் ஆவணி அமாவாசை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. அன்று அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் செய்து அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட உள்ளதால் பக்தக் கோடிகள் அனைவரும் திரளாக கலந்துக்கொள்ளலாம். அங்காலம்மன் பக்தர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 17, 2025

விழுப்புரம்: இலவச AI பயிற்சி… கைநிறைய சம்பளம்

image

விழுப்புரத்தில் AI படிக்க விரும்பும் இளைஞர்களுக்கு செம வாய்ப்பு. வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு திறன் சார்ந்த பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு 12th, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்த 18 – 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். AI டெவலப்பர், டேட்டா அனலிஸ்ட் ஆகிய பதவிகளில் ரூ.4.5 லட்சம் சம்பளத்தில் வேலை பெறலாம். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். ஷேர்

News August 17, 2025

விழுப்புரம்: பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு

image

விழுப்புரத்தில் இன்று(ஆக.17) நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கட்சியின் தலைவராக தொடர்வார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுக்குழுவில் பங்கேற்றவர்கள் எழுந்து நின்று கரங்களை தட்டி ஆதரவு தெரிவித்தனர். மேலும் 2026 தேர்தல் கூட்டணி குறித்து பேச ராமதாசுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

error: Content is protected !!