News March 20, 2024
உலக சிட்டுக்குருவிகள் தினம்!

உலகம் மனிதனுக்கு மட்டுமானது அல்ல. அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது. நகர மயமாதல், மனிதர்களின் பழக்கவழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதல்களால், மனிதர்களைச் சார்ந்து வாழும் சிட்டுக்குருவிகள் உணவு பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்கின்றன. இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, 2010ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20ஆம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
Similar News
News April 7, 2025
பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு? அமைச்சர் பதில்

TN முழுவதும் இன்னும் சில நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. தற்போது கோடை வெயில் கொளுத்துவதால், மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட விடுமுறை காலம் நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியாகி வருகிறது. இதுகுறித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், காலநிலை மேலாண்மை குழு பரிந்துரை அடிப்படையில், பள்ளி திறப்பு குறித்தும், விடுமுறை நீட்டிப்பு குறித்தும் முடிவு செய்யப்படும் என்றார்.
News April 7, 2025
பெண்களுக்கு `அந்த’ விஷயம் திருப்தியில்லை… ஆய்வு

பெண்களில் 3-ல் 2 பேருக்கு தங்கள் மார்பகங்களின் அளவில் திருப்தி இல்லையென உலகளாவிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 40 நாடுகளில் 18,000 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 29% பெண்கள் தான் திருப்தி தெரிவித்தனர்; பெரியதாக வேண்டுமென்று 48% பேரும், சிறியதாக இருந்தால் நன்றாக இருக்குமென்று 23% பேரும் தெரிவித்தனர். மார்பகம் பற்றிய பெண்களின் எண்ணம் அவர்களின் உடல், மனநலத்தில் தாக்கம் ஏற்படுத்துகிறதாம்.
News April 7, 2025
நாளை இந்தியா வருகிறார் துபாய் பட்டத்து இளவரசர்

துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான், 2 நாள் அரசு முறை பயணமாக நாளை இந்தியா வருகிறார். பிரதமர் மோடியைச் சந்தித்து இரு நாட்டு உறவு குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். பின்னர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரையும் சந்தித்து பேச உள்ளார். அதுமட்டுமில்லாமல், நாளை மறுநாள் மும்பையில் நடைபெற உள்ள, இந்தியா- UAE தொழிலதிபர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.