News March 20, 2024
வெட்கமில்லாதவரின் பேச்சு இது!

சேலம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதை அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர், “மூப்பனார் மகன் வாசன், ராமதாஸ் மகன் அன்புமணி, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், குமரி ஆனந்தன் மகள் தமிழிசையை மேடையில் வைத்துக் கொண்டு வாரிய அரசியலை ஒழிப்போம் என மோடி பேசுவது அவரது நேர்மைக்கான எடுத்துக்காட்டு” எனக் கூறியுள்ளார். மேலும், வெட்கமே இல்லாத ஒருவர் தான் இப்படி பேசுவார் எனவும் சாடியுள்ளார்.
Similar News
News September 8, 2025
முடங்கியது TET சர்வர்.. ஆசிரியர்கள் தவிப்பு

2012-ம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு TET தேர்வு கட்டாயமாகியுள்ளது. தேர்வு எழுதுவோர் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. கடைசி நாளான இன்று ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் விண்ணப்பித்த நிலையில், trb.tn.gov.in இணையதள சர்வர் முடங்கியுள்ளது. இதனால், பலரும் விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். நவம்பரில் TET தேர்வு நடைபெறவுள்ளது.
News September 8, 2025
கணவரின் பேச்சை கேட்டு ஆட்சி செய்யும் டெல்லி CM?

டெல்லி CM ரேகா குப்தாவின் அரசு நிகழ்வுகளில் அவரது கணவர் மனிஷ் பங்கேற்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரேகா வெறும் பொம்மை எனவும் அவரை பின்னால் இருந்து இயக்குவது அவரது கணவர்தான் என்றும் ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது. மேலும், வாரிசு அரசியல் செய்வதாக காங்.-ஐ சாடும் BJP-யும் அதையேதான் செய்கிறது என Ex அமைச்சர் சௌரப் பரத்வாஜ் சாடியுள்ளார். அரசியலிலுள்ள பெண்களை ஆண்கள் ஆட்டுவிப்பது பற்றி உங்கள் கருத்து?
News September 8, 2025
BREAKING: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

தங்கம் விலை இன்று(செப்.8) காலை நேர வர்த்தகத்தில் சவரனுக்கு ₹280 குறைந்த நிலையில், மாலை நேர வர்த்தகப்படி சவரனுக்கு ₹720 உயர்ந்துள்ளது. இதனால், வரலாறு காணாத புதிய உச்சமாக 22 கேரட் 1 கிராம் ₹10,060-க்கும், ஒரு சவரன் ₹80,480-க்கும் விற்பனையாகிறது.