News November 5, 2024
விபத்தில் தொலைக்காட்சி ஊழியர் பலி!

சென்னை அசோக் நகரில் பணிக்கு சென்று கொண்டிருந்த தனியார் தொலைக்காட்சி ஊழியர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, திடிரென ஆட்டோ ஒன்று அவர் மீதுஉ மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அசோக் நகர் சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் பெயர் புருஷோத்தமன் (27), வண்ணாரப்பேட்டையில் வசித்து வந்தார்.
Similar News
News September 12, 2025
சென்னை தொழிலதிபரிடம் ரூ.22 கோடி மோசடி

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த சுவேதரன்யன் (76) என்ற தொழிலதிபர் போலியான ஆன்லைன் தளத்தில் முதலீடு செய்து ரூ.22.30 கோடியை இழந்துள்ளார். இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அருணை சந்தித்து கடந்த ஜூன் மாதம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையில், குஜராத், ஆமதாபாத்தைச் சேர்ந்த படேல் ஜே (28) என்பவர் கைது செய்யப்பட்டார்.
News September 12, 2025
சென்னையில் மினிபஸ் திட்டம் தோல்வி?

சென்னையில் தொடங்கப்பட்ட புதிய மினிபஸ் திட்டம், முறையான திட்டமிடல் இல்லாததால் முடங்கியுள்ளது. தகுதி சரிபார்க்காமல் குலுக்கல் முறையில் அனுமதி வழங்கப்பட்டதால், உரிமையாளர்கள் பழைய பேருந்துகளை தன்னிச்சையாக இயக்குகின்றனர். வழித்தடம், கால அட்டவணை குறித்த தகவல்கள் இல்லாததால் கடும் அவதிக்குள்ளாவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
News September 12, 2025
உத்தரவிட்டும் ஏன் கலைந்து செல்லவில்லை?- நீதிமன்றம் கேள்வி

தூய்மைபணியாளர்கள் போராட்டத்தின்போது நீதிமன்ற அறிவுறுத்தலை மீறி காவல்துறையினர் அத்துமீறியதாக தூய்மை பணியாளர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. கலைந்து செல்ல மறுத்ததால் கைது செய்ததாக காவல்துறை தெரிவித்த நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டும் ஏன் அமைதியாக கலைந்து செல்லவில்லை என தூய்மை பணியாளர் தரப்புக்கு கேள்வியெழுப்பிய உயர்நீதிமன்றம், 3 வாரங்களுக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.