News March 19, 2024
ராகுல் காந்திதான் ஒரே நம்பிக்கை

135 கோடி மக்களின் ஒரே நம்பிக்கையாக ராகுல் காந்தி திகழ்வதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பாசிச மற்றும் சர்வாதிகார ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரக் கூடிய ஒரே தலைவர் ராகுல் தான் எனக் கூறியுள்ளார். மேலும், நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற அர்ப்பணிப்புடன் அவர் செயல்படுவதாகவும் சிதம்பரம் கூறியுள்ளார்.
Similar News
News September 7, 2025
ஆசிய கோப்பை: சாம்சனை ஓரங்கட்ட முடிவு?

ஆசிய கோப்பையில் இந்தியாவின் முதல் போட்டியில், சாம்சனுக்கு பதிலாக ஜிதேஷ் சர்மா அணியில் தேர்வு செய்யப்படவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. துபாயில் பயிற்சியின் போது, சாம்சனை விட ஜிதேஷ் சர்மாவிடமே கம்பீர் அதிக நேரத்தை செலவிட்டுள்ளார். இந்த தொடரில் கில்லின் வருகைக்கு பின்னர், ஓபனரான சாம்சனின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால், கீப்பர் என்ற முறையில் ஜிதேஷ் சர்மாவுடன் அவர் போட்டியில் உள்ளார்.
News September 7, 2025
டிரம்பின் நட்புக்காக தேசத்தின் எதிரியான மோடி: கார்கே சாடல்

PM மோடி டிரம்பின் நண்பராக இருக்கலாம், ஆனால் தேசத்தின் எதிரியாகிவிட்டதாக காங்., தலைவர் கார்கே சாடியுள்ளார். இந்தியாவின் இழப்பில் தான் டிரம்ப் – மோடி நட்பு மேம்பட்டுள்ளதாகவும், GST மறுசீரமைப்பை கொண்டு வர வேண்டும் என காங்., 8 ஆண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தியதாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். மேலும், பல மாநிலங்களில் தேர்தல் வருவதாலேயே தற்போது வரி குறைக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
News September 7, 2025
UPI கட்டண வரம்புகள் விவரம்

தனிநபர்கள் நிறுவனங்களுக்கு UPI மூலம் பணம் செலுத்தும்(P2M) வரம்பு செப்.15 முதல் உயர்கிறது. அதன்படி, கிரெடிட் கார்டு பேமெண்ட்க்கு ஒரு பரிவர்த்தனைக்கு ₹5 லட்சம் (ஒரு நாளைக்கு ₹6 லட்சம்), பயணக் கட்டணம் -₹5 லட்சம், லோன் & EMI -₹5 லட்சம் (₹10 லட்சம்), முதலீடு & இன்ஷூரன்ஸ் -₹5 லட்சம் (₹10 லட்சம்), வரி -₹5 லட்சம், வங்கி சேவைகள் -₹5 லட்சம். எனினும், தனிநபர்களுக்கு அனுப்பும் வரம்பு ₹1 லட்சமாகவே தொடரும்.