News March 19, 2024
விஜய் கட்சியில் இணைந்த ரேவந்த் சரண்

சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கின் இயக்குநர் ரேவந்த் சரண், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்துள்ளார். இதுகுறித்து தனது X பக்கத்தில் பதிவிட்ட அவர், “20 வருடங்களுக்கும் மேலாக அவரது ரசிகராக இருந்து வருகிறேன். தமிழகத்தை முற்போக்கான, ஊழலற்ற மற்றும் பாதுகாப்பான மாநிலமாக மாற்றும் அவரது சிந்தனையுடன் இணைவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
Similar News
News April 21, 2025
31 பந்துகளில் அரைசதம்.. ரோஹித் மீண்டும் அதிரடி

நடப்பு சீசனில் தொடர்ந்து தடுமாறி வந்த ரோஹித்
சர்மா சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் அரைசதம் அடித்தார். மும்பைக்கு 5 கோப்பைகளை கேப்டனாக பெற்று தந்த ரோஹித் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பிவந்தார். இதனால் தொடர்ந்து விமர்சனங்களை எதிர்கொண்டு வந்த அவர் இன்றைய போட்டியில் பேட்டால் பதில் அளித்துள்ளார். ரோஹித் 31 பந்துகளை அரைசதம் அடிக்க, மும்பை அணி 13 ஓவர்களில் 127 ரன்கள் சேர்த்துள்ளது.
News April 21, 2025
பெனினில் தீவிரவாதிகள் தாக்குதல்… 70 வீரர்கள் பலி

பெனின் நாட்டில் அல்கொய்தா தீவிரவாதிகள் நடத்தியத் தாக்குதலில் 70 வீரர்கள் பலியாகினர். ராணுவச் சாவடிகளில் அண்மைகாலமாக அல்கொய்தா, ஐஎஸ் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வடகிழக்கு மாகாணத் தலைநகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 70 வீரர்களை கொன்று விட்டதாக அல்கொய்தா அமைப்பு தெரிவித்துள்ளது. ராணுவம் தரப்பில் பதில் இல்லை.
News April 21, 2025
காதல் சுகுமார் தலைமறைவு.. வலைவீசி தேடும் போலீஸ்

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் காதல் சுகுமார் மீது துணை நடிகை ஒருவர் மோசடி புகார் அளித்திருந்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறி பணம், நகைகளை பெற்று ஏமாற்றி விட்டதாகவும் கூறியிருந்தார். புகாரை விசாரித்த மாம்பலம் மகளிர் போலீசார் 3 பிரிவுகளில் சுகுமார் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் காதல் சுகுமாரன் தலை மறைவாக, போலீசார் அவரை தேடி வருகின்றனர்.