News March 19, 2024
புதுச்சேரியை விட்டு செல்வது மனதுக்கு சிரமம்

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை செளந்தரராஜன் இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். புதுச்சேரி மக்கள் என் மீது அன்பை பொழிந்தனர். அந்த அன்பு எப்போதும் தொடரும், ஆனால் புதுச்சேரியை விட்டு செல்வது மனதுக்கு சிரமமாகத்தான் இருக்கின்றது, மாளிகை வாழ்க்கையை விட்டு மக்கள் பணிக்கு செல்கின்றேன் ஆகவே நாளை தமிழக பாஜக அலுவலகம் செல்கின்றேன் என்ன சொல்கிறார்களோ அதன்படி செய்வேன் என்றார்.
Similar News
News December 24, 2025
புதுவை: SI பணிக்கு எழுத்து தேர்வு தேதி அறிவிப்பு

புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 70 சப்-இன்ஸ்பெக்டர் (SI) பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதற்காக 17 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தற்போது இந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இவர்களுக்கான எழுத்துத் தேர்வு 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ம் தேதி நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 24, 2025
புதுவை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

புதுவை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 24, 2025
புதுவை: விபத்தில் சிக்கிய முதியவர்!

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் (67) என்பவர் நேற்று முன்தினம் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்குச் செல்வதற்காகத் திருநள்ளாறு – அம்பகரத்தூர் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த ஸ்கூட்டர் அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியதில் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில், காரைக்கால் வடக்கு பகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


