News March 19, 2024

திருப்பதி கோவிலில் நாளை தொடங்குகிறது

image

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் நாளை தொடங்கி 24ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. நாளை முதல் நாளில், இரவு உற்சவர்களான ராமச்சந்திரமூர்த்தி, சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகியோர் தெப்பத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர். 20, 21ஆம் தேதிகளில்- சகஸ்ர தீபலங்கார சேவை, 22, 23, 24ஆம் தேதிகளில்- ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ரத்து செய்யப்படுகின்றன.

Similar News

News September 8, 2025

BREAKING: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

image

அதிமுகவில் உள்கட்சி பிரச்னை ஒருபுறம் இருக்க அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பல இடங்களில் அதிருப்தியில் உள்ளோரை திமுக தங்கள் வசம் இழுத்து வருகிறது. கொங்கு மண்டலத்தில் செந்தில்பாலாஜி கச்சிதமாக காய்நகர்த்தி வருகிறார். அந்த வகையில், கரூரில் ADMK, BJP, DMDK-வில் இருந்து விலகிய பலர் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். கொங்கு மண்டலத்தில் முக்கிய தலைவர் ஒருவரை இணைக்க செந்தில்பாலாஜி திட்டமிட்டுள்ளாராம்.

News September 8, 2025

FLASH: 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் பரவலாக இன்று(செப்.8) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. நேற்று, ராணிப்பேட்டை, ஆற்காடு, தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ஆலங்குடி, சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியே செல்வோர் குடையை மறக்காம எடுத்துட்டு போங்க.

News September 8, 2025

முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் மூலிகை தேநீர்!

image

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மயிர்க்கால்களைத் தூண்டி, ரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. மேலும், இது DHT ஹார்மோன் உற்பத்தியைக் குறைத்து, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
✦உலர்ந்த ரோஸ்மேரி இலைகளை, நீரில் போட்டு 5- 10 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும்.
✦இதனை வடிகட்டி, சாறை பிழிந்து, தேன் கலந்து சூடாகவோ, ஆற வைத்தோ குடிக்கலாம். SHARE IT.

error: Content is protected !!