News November 4, 2024

ஆரல்வாய்மொழி தண்டவாளத்தில் ஊர்ந்து சென்ற ஆமை 

image

ஆரல்வாய்மொழி மீனாட்சிபுரம் கிருஷ்ணனுக்கு சொந்தமான தோட்டம் ஆரல்வாய்மொழி ரயில் நிலையம் அருகில் உள்ளது. நேற்று (நவ.3) இவரது தோட்டத்திற்கு செல்லும் போது ரயில் தண்டவாளம் அருகே ஒரு ஆமை ஊர்ந்து செல்வதைப் பார்த்த கிருஷ்ணன், ரயில் வரும் நேரம் என்பதால் ஓடிச்சென்று ஆமையை எடுத்து ரயில் நிலைய அலுவலர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் வனத்துறையினருக்கு தகவல் அளித்து ஆமையை பொய்கை அணையில் விட்டனர்.

Similar News

News August 9, 2025

குமரி: பூம்புகார் படகு சேவை START..!

image

குமரியில், கண்ணாடி இழை பாலம் திறந்ததையடுத்து, இதுவரை 16 லட்சம் பயணிகள் குமரிக்கு வருகைதந்துள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பொருட்டு, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கு கழகத்தின் சார்பில், படகு பயணம் மேற்கொள்ள ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியுள்ளது.<> இந்த லிங்கை கிளிக்<<>> செய்து 24 மணி நேரமும் முன்பதிவு செய்து கொள்ளலாம். காலை 8 மணி முதல், மாலை 4 மணி வரை பயணம் மேற்கொள்ளலாம். SHARE IT..!

News August 9, 2025

தலைமை தபால் நிலையத்தில் 24 மணி நேர சேவை

image

குமரி அஞ்சல் கோட்டகண்காணிப்பாளர் செந்தில் குமார் இன்று வெளியிட்ட செய்தியில், நாகர்கோவில் தலைமை தபால் அலுவலகத்தில் வருகிற 11-ம் தேதி முதல் பதிவு, விரைவு பார்சல் தபால்களுக்கு 24 மணி நேர முன்பதிவு வசதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் மக்கள் எந்த நேரத்திலும், விடுமுறை நாட்களிலும் தபால் சேவை பெரும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும், மூன்று சீட்டு அடிப்படையில் கவுண்டர் செயல்படும் என தெரிவித்துள்ளார்.

News August 8, 2025

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு புதிய டீன் நியமனம்

image

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி டீனாக லியோ டேவிட் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி துணை முதல்வராக பணியாற்றி வந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ஆக நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது அங்கிருந்து கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக மாற்றப்பட்டுள்ளார்.

error: Content is protected !!