News November 3, 2024

ரயில் கவிழ்க்க முயற்சி – 4 தனிப்படைகள் அமைப்பு

image

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே போகநல்லூரில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்ப்பதற்கு தண்டவாளத்தில் அடிக்கடி கற்கள் வைக்கும் சம்பவம் அரங்கேறி வந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை பிடிப்பதற்கு இன்று நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Similar News

News October 3, 2025

தென்காசி: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். Share பண்ணுங்க..

News October 3, 2025

தென்காசி: கள்ளகாதல் விவகாரம்: ஒருவர் கொலை!

image

தென்காசி, ஆழ்வார்குறிச்சி அருகே கணேசன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆரம்பத்தில் இறந்தது வாகன விபத்தாக கருதபட்ட நிலையில், பிரேத பரிசோதனையில் கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. விசாரணையில், கணேசனுக்கு ஒரு பெண்ணுடன் இருந்த கள்ளக்காதல் காரணமாக, ஆத்திரமடைந்த அப்பெண்ணின் குடும்பத்தினர் அவரைத் தாக்கி கொன்று, விபத்து போல நாடகமாடியது அம்பலமானது. இது தொடர்பாக போலீசார் 4 பேர் கைது.

News October 3, 2025

தென்காசி: அக்.4 மின்தடை – உங்க ஏரியா இருக்கான்னு பாருங்க!

image

தென்காசி, செங்கோட்டை உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் அக்.4ல் நடைபெறவுள்ளது. இதனால் தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, இலஞ்சி. குத்துக்கல்வலசை, ஆயிரப்பேரி, இலத்தூர், மத்தளம்பாறை, மேலமெஞ்ஞானபுரம், செங்கோட்டை, கணக்கபிள்ளைவலசை, பளியரை, வல்லம், தெற்குமேடு, பூலாங்குடியிருப்பு கட்டளை குடியிருப்பு பகுதியில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!