News March 19, 2024
பாஜக எம்.பி., தேஜஸ்வி சூர்யா கைது

மதக்கலவரத்தை தூண்டியதாக பாஜக MP தேஜஸ்வி சூர்யாவை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். நாகர்ட்பேட் பகுதியில், இஸ்லாமியர்கள் நமாஸ் செய்தபோது, மொபைல் கடைக்காரர் முகேஷ் என்பவர் அனுமன் பாடலை இசைத்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் முகேஷ் தாக்கப்பட்ட நிலையில், அதனை கண்டித்து தேஜஸ்வி உள்ளிட்டோர் பேரணி சென்றனர். அப்போது தேர்தல் விதிகளை மீறி மத வெறுப்புப் பேச்சுகளை பேசியதாக போலீசார் அவரை கைது செய்தனர்.
Similar News
News September 8, 2025
இந்தியா மீது மீண்டும் வரி விதிக்க USA திட்டமா?

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது மேலும் வரிகளை விதித்தால், அவர்கள் அந்நாட்டிடமிருந்து எண்ணெய் வாங்கமாட்டார்கள் என USA கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார். EU-வுடன் இணைந்து இதை செயல்படுத்தினால், ரஷ்யாவின் பொருளாதாரம் வீழ்வதோடு, புடினும் வழிக்கு வருவார் என அவர் பேசியுள்ளார். இதனால், இந்தியா மீது மீண்டும் கூடுதல் வரி விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News September 8, 2025
மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத உணவுகள்!

பெரும்பாலான வீடுகளில் மதியம் சமைத்த உணவு மீதமிருந்தால், அதனை சூடுபடுத்தி டின்னருக்கு சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. சில உணவுகள் கெடவில்லை என்றாலும் அதை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் அது விஷமாக மாறும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எந்தெந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது என போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துக்கொள்ளுங்கள். SHARE.
News September 8, 2025
BREAKING: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

அதிமுகவில் உள்கட்சி பிரச்னை ஒருபுறம் இருக்க அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பல இடங்களில் அதிருப்தியில் உள்ளோரை திமுக தங்கள் வசம் இழுத்து வருகிறது. கொங்கு மண்டலத்தில் செந்தில்பாலாஜி கச்சிதமாக காய்நகர்த்தி வருகிறார். அந்த வகையில், கரூரில் ADMK, BJP, DMDK-வில் இருந்து விலகிய பலர் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். கொங்கு மண்டலத்தில் முக்கிய தலைவர் ஒருவரை இணைக்க செந்தில்பாலாஜி திட்டமிட்டுள்ளாராம்.