News November 3, 2024

முருகன் கோவில் பணியாளரை தாக்கியதாக இளைஞர் கைது

image

திருத்தணி முருகன் கோவிலில் பணியாளர் ரமேஷ் (47) என்பவர் மலைக் கோவில் விரைவு தரிசனம் வழியில் டிக்கெட் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திருவண்ணாமலையைச் சேர்ந்த அபிஷேக் (19) என்பவர் இலவசமாக சென்று சாமி தரிசனம் செய்ய விடுமாறு தகராறு செய்து பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார். இதையடுத்து, கோயில் பணியாளரை தாக்கி பிரச்னை செய்ததாக அபிஷேக் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News September 12, 2025

திருவள்ளூர்: இங்கு வழிபட்டால் இதனை நன்மைகளா?

image

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் 1000 வருட ஜெகந்நாதபெருமாள் கோவில் உள்ளது. இங்குள்ள பிருகு தீர்த்தத்தில் நீராடி பெருமாளை வணங்கினால் பாவங்கள் விலகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. மேலும், இங்கு சிறப்பு பூஜை செய்தால் படிப்பறிவு, அரசு வேலை, வெளிநாட்டு வேலை மற்றும் பதவி உயர்வு கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது. *தேவைப்படுவோருக்கு பகிர்ந்து தெரியப்படுத்தவும்*

News September 12, 2025

போலீஸ் வேலை: திருவள்ளூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திருவள்ளூர்: இரண்டாம் நிலைக் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான 3,665 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 21.09.2025. இப்போட்டித் தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு 17.09.2025 புதன்கிழமை காலை 10.30 மணியளவில் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 8489866698, 9626456509 என்ற எண்ணை அழைக்கவும்.

News September 12, 2025

திருவள்ளூர்: கேன் தண்ணீர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!