News March 19, 2024
சிவகங்கை: ரூ.50,000 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லக்கூடாது

மக்களவை தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள், வியாபாரிகள் ரூ.50,000 க்கு மேல் ரொக்கம் மற்றும் ரூ.10,000 க்கு மேல் மதிப்புள்ள பொருட்களை உரிய ஆவணங்களுடன் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ள கலெக்டர் ஆஷா அஜித், பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம், பொருட்களை திரும்பப்பெற கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குறைதீர் கமிட்டியிடம் ஆவணங்களை சமர்ப்பித்து வாங்கிகொள்ளலாம் எனக் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 31, 2025
சிவகங்கை: கூட்டுறவு வங்கியில் வேலை! APPLY NOW!

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழக அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வி தகுதி: Any Degree, B.E/B.Tech
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க.
News December 31, 2025
சிவகங்கை: ஆன்லைன் ஆப் மூலம் ரூ.2.76 லட்சம் மோசடி!

சிவகங்கை வாணியங்குடியைச் சேர்ந்தவர் அமர்நாத். இவரது அலைபேசிக்கு டெலிகிராம் ஆப் மூலம் பகுதி நேர வேலை தருவதாக ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் தொடர்பு கொண்டு பேசியவரின் வங்கி கணக்கிற்கு ரூ.2 லட்சத்து 76 ஆயிரத்து 29 மாற்றினார். அந்த பணத்தை பெற்ற அந்த நபர் பகுதி நேர வேலை பெற்றுத்தரவில்லை. பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அமர்நாத் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
News December 31, 2025
சிவகங்கையில் போலீஸ் மீது தாக்குதல்!

சிவகங்கை தாலுகா சார்பு ஆய்வாளர் சக்திவேல், காவலர் சூர்யகுமார் உள்ளிட்ட போலீசார் நாட்டரசன்கோட்டையில் குற்றப்பதிவேடு குற்றவாளியான ஆலடியார் தெருவை சேர்ந்த ஈஸ்வரனை கண்காணிக்க சென்றனர். அப்போது ஈஸ்வரன் எஸ்.ஐ., மற்றும் உடன் இருந்த போலீசாரை அசிங்கமாக பேசி கையில் வைத்திருந்த கட்டையால் தாக்கினார். போலீசார் அவரை கைது செய்தனர்.


