News March 19, 2024
பங்குச் சந்தைகள் கடும் சரிவு

இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடுமையான சரிவினை சந்தித்திருக்கின்றன. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி இன்று 238 புள்ளிகளை இழந்து 21,817 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 736 புள்ளிகளை இழந்து 72,012 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. அன்னிய நாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து வெளியேறுவதே வீழ்ச்சிக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
Similar News
News September 7, 2025
தலைவர் பின்னால் இருந்தாலே போதும்: உபேந்திரா

‘கூலி’ படத்தில் கேமியோ ரோல்கள், குறைவான நேரமே திரையில் தோன்றியதாக விமர்சனங்கள் உள்ளன. இந்நிலையில், இதுகுறித்து உபேந்திராவிடம் கேட்டதற்கு, தான் ரஜினிகாந்தின் பின்னால் இருப்பதற்காகவே சென்றேன், அதுவே எனக்கு போதுமானது என்றார். முன்னதாக, ஆமிர் கானும் இதே பதிலையே கூறியிருந்தார். இருப்பினும், அனைவருக்கும் வலிமைமிக்க ரோல்கள் கொடுக்கப்பட்டிருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.
News September 7, 2025
தாமதத்துக்காக மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்

மணிப்பூரில் நடந்த வன்முறைக்கு பிறகு, இம்மாதம் PM மோடி அங்கு முதல்முறையாக செல்லவுள்ளார். இந்நிலையில், மணிப்பூரில் இன்னும் இயல்புநிலை திரும்பாததால், மோடியின் பயணத்தின் மூலம் இலக்கை அடைந்துவிட்டதாக பாஜக கருதக்கூடாது என்று காங்., கடுமையாக விமர்சித்துள்ளது. அம்மாநில காங்., தலைவர் கெளரவ் கோகாய் கூறுகையில், மிக தாமதமான பயணத்துக்காக முதலில் PM மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
News September 7, 2025
கார்ல் மார்க்ஸ் பொன்மொழிகள்

*மன துன்பங்களுக்கு ஒரே மருந்து உடல் வலி.
*மனிதன் தான் மதத்தை உருவாக்குகிறான், மதம் மனிதனை உருவாக்கவில்லை.
*எல்லா செல்வங்களுக்கும் மூலமாய் இருப்பது உழைப்பு.
*கயிற்றை நமக்கு விற்றவன்தான் நாம் தூக்கிலிடும் கடைசி முதலாளியாக இருப்பான்.
*பயனுள்ள பொருட்களை அதிகப்படியாக உற்பத்தி செய்வது பயனற்ற நபர்களை அதிகளவில் உருவாக்குகிறது. *ஜனநாயகம் என்பது சமூகவுடைமைக்கான பாதை.