News March 19, 2024

வேலூர்: பிரபல ரவுடி அதிரடி கைது

image

வேலூர் வள்ளலார் பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ் (36), கூலித் தொழிலாளி. இவர் நேற்று ரங்காபுரம் வழியாக வேலைக்கு நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த பிரபல ரவுடியான பிரபு சத்யராஜை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றுள்ளார்.  இதுதொடர்பாக சத்யராஜ் சத்துவாச்சாரி போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து பிரபுவை இன்று (மார்ச் 19) கைது செய்தனர்.

Similar News

News February 5, 2026

வேலூர்: Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்!

image

வேலூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை<> கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை உடனே SHARE பண்ணுங்க.

News February 5, 2026

வேலூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

வேலூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

News February 5, 2026

வேலூர்: “அம்மா நான் சாக போறேன்…” மாணவன் தற்கொலை!

image

ரெட்டியார்பல்லியை சேர்ந்த ஜீவநேசன், குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவரது மகன் யோகநேசன் (14) 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் யோகநேசன் வீட்டில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினான். போலீசார் கைப்பற்றிய கடிதத்தில் “படி படியென தொடர்ந்து வற்புறுத்துவதால்” தற்கொலை செய்து கொண்டதாக எழுதி இருந்தது. இதை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!