News March 19, 2024

தர்மபுரி அருகே விபத்து

image

அரூர் பகுதியை சேர்ந்தவர் தென்னரசு 28. இவர் மோட்டார் சைக்கிளில் ஆட்டியானூர் கிராமத்தை சேர்ந்த பரிமளா 29 என்பவரை டூவீலரின் பின்புறம் உட்கார வைத்துக் கொண்டு சென்றார். பறையபட்டி அரசுப்பள்ளி எதிரே வந்த அரசு பஸ், டூவீலர் மீது மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரையும் அரூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுகுறித்து மொரப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News August 8, 2025

இன்று தர்மபுரியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

தருமபுரி வருவாய் கோட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் இன்று (ஆக.8) காலை 11:00 மணிக்கு தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தருமபுரி வருவாய் கோட்ட அலுவலர் தலைமை தாங்கி, விவசாயிகளின் குறைகளைக் கேட்டுத் தீர்த்து வைப்பார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.

News August 7, 2025

தர்மபுரி: பட்டா சிட்டா விபரங்களை அறிய வேண்டுமா?

image

தர்மபுரி மக்களே, உங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள் குறித்து எளிதில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் தங்களது நில விவரம், பட்டா, சிட்டா திருத்தம் போன்ற சேவைகளை மேற்கொள்ளலாம் (அல்லது) அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

News August 7, 2025

மினி சரக்கு வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு

image

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கம்மாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி வையாபுரி (வயது.37) இவர் இன்று உறவினர் வீட்டுக்கு செல்ல மொபெட் வாகனத்தில் பாப்பாரப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். தொட்லாம்பட்டி பெருமாள் கோயில் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த மினி சரக்கு வாகனம் மோதியதில் வையாபுரி தலை நசுங்கி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிர் இழந்தார்.

error: Content is protected !!