News March 19, 2024
தர்மபுரி அருகே விபத்து

அரூர் பகுதியை சேர்ந்தவர் தென்னரசு 28. இவர் மோட்டார் சைக்கிளில் ஆட்டியானூர் கிராமத்தை சேர்ந்த பரிமளா 29 என்பவரை டூவீலரின் பின்புறம் உட்கார வைத்துக் கொண்டு சென்றார். பறையபட்டி அரசுப்பள்ளி எதிரே வந்த அரசு பஸ், டூவீலர் மீது மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரையும் அரூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுகுறித்து மொரப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News October 25, 2025
தருமபுரி பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு

தருமபுரியில் இன்று (அக்.25) அனைத்து பள்ளிகளும் செவ்வாய்க்கிழமை அட்டவணைப் படி பணி நாளாக செயல்படும் என தர்மபுரி முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். தீபாவளிக்கு அக்.21 அன்று அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் தருமபுரியில் உள்ள அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும். ‘ நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க”
News October 25, 2025
தருமபுரி ஆட்சியர் அறிவிப்பு

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் TNPSC, TET, TRB, TNUSRB, SSC, RRB, IBPS உள்ளிட்ட அரசுப் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இப்பயிற்சிக்காக அனுபவமிக்க புதிய பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் 15.11.2025க்குள் சுயவிவரத்துடன் நேரில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ் இன்று தெரிவித்துள்ளார்.
News October 24, 2025
தருமபுரியில் ’நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, நகராட்சி நிர்வாகம் இணைந்து தருமபுரி அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மாபெரும் மருத்துவ முகாம் நாளை அக். 25, (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. 17 சிறப்பு பிரிவுகளில் இலவச பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்தார கேட்டுக் கொள்ளப்படுகிறது.


