News March 19, 2024
இடஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கப்படும்

நாட்டில் தற்போதுள்ள இடஒதுக்கீடு உச்சவரம்பான 50% நீக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றுள்ளது.. சமூக, பொருளாதார, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயப் பணிகளுக்கு ஜி.எஸ்.டி விலக்கு, 30 லட்சம் இளைஞர்களுக்கு அரசுப் பணி ஆகிய அம்சங்கள் காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றுள்ளன.
Similar News
News September 7, 2025
செப்டம்பர் 7: வரலாற்றில் இன்று

*1533 – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் பிறந்தநாள்.
*1923 – பன்னாட்டுக் காவலகம் (Interpol) ஆரம்பிக்கப்பட்டது.
*1951 – நடிகர் மம்மூட்டி பிறந்தநாள்.
*1985 – நடிகை ராதிகா ஆப்தே பிறந்தநாள்.
*1999 – இலங்கை ராணுவத்தினரால் யாழ்ப்பாணம் செம்மணியில் கொல்லப்பட்ட 600-க்கும் மேற்பட்ட தமிழர்களின் புதைகுழி விபரம் தெரியவந்தது.
News September 7, 2025
தலைவர் பின்னால் இருந்தாலே போதும்: உபேந்திரா

‘கூலி’ படத்தில் கேமியோ ரோல்கள், குறைவான நேரமே திரையில் தோன்றியதாக விமர்சனங்கள் உள்ளன. இந்நிலையில், இதுகுறித்து உபேந்திராவிடம் கேட்டதற்கு, தான் ரஜினிகாந்தின் பின்னால் இருப்பதற்காகவே சென்றேன், அதுவே எனக்கு போதுமானது என்றார். முன்னதாக, ஆமிர் கானும் இதே பதிலையே கூறியிருந்தார். இருப்பினும், அனைவருக்கும் வலிமைமிக்க ரோல்கள் கொடுக்கப்பட்டிருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.
News September 7, 2025
தாமதத்துக்காக மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்

மணிப்பூரில் நடந்த வன்முறைக்கு பிறகு, இம்மாதம் PM மோடி அங்கு முதல்முறையாக செல்லவுள்ளார். இந்நிலையில், மணிப்பூரில் இன்னும் இயல்புநிலை திரும்பாததால், மோடியின் பயணத்தின் மூலம் இலக்கை அடைந்துவிட்டதாக பாஜக கருதக்கூடாது என்று காங்., கடுமையாக விமர்சித்துள்ளது. அம்மாநில காங்., தலைவர் கெளரவ் கோகாய் கூறுகையில், மிக தாமதமான பயணத்துக்காக முதலில் PM மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.