News November 2, 2024
பட்டாசு தீப்பொறிபட்டு தீ விபத்து

சிவகாசி புதுத்தெருவில் வசிப்பவர்கள் காளிராஜன் ( 55). இவர் தனது மருமகன் வசந்தகுமாருடன் பைக்கில் பட்டாசு வாங்கிக்கொண்டு புதுத்தெரு நோக்கி சென்றனர். அப்போது அங்கு பட்டாசுகள் வெடித்து கொண்டிருந்தவர்கள் தூக்கி எறிந்த பட்டாசின் தீப்பொறி பட்டு தீ விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். காளிராஜன் 90% தீக்காயத்துடனும், வசந்த்குமார் 10% தீக்காயத்துடன் சிகிச்சை பெறுகின்றனர்.
Similar News
News October 22, 2025
விருதுநகர்: நிலம் வாங்க ரூ.5 லட்சம் வேண்டுமா..!

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 % முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) விருதுநகர் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News October 22, 2025
சிவகாசி அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி!

சிவகாசி அருகே உள்ள செவளூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணசுப்பு மனைவி சின்னம்மாள் (வயது 65). இவர் வீட்டில் உள்ள டியூப்லைட் எரியாத நிலையில் அதனை சரி பார்க்க முயன்ற போது எதிர்பாராமல் மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு விருதுநகர் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சின்னம்மாளை பரிசோதனை செய்த டாக்டர், சின்னம்மாள் வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
News October 22, 2025
JUST IN விருதுநகர்: 5810 காலியிடங்கள் அறிவிப்பு

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. ஆரம்ப நாள்: 21.10.2025
4. கடைசி தேதி : 20.11.2025
5. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<