News November 2, 2024
கூட்டுறவு சங்கத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட மேலாளர் கைது

சேலம் மாவட்டம், ஓமலூர் அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் கிளை மேலாளர் கருப்பூரைச் சேர்ந்த பச்சியப்பன் (37) ரூபாய் 26.37 லட்சம் கையாடல் செய்ததாக வந்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பச்சியப்பனை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த கணக்காளர் சத்யா என்பவரை தேடி வருகின்றனர்.
Similar News
News August 27, 2025
‘SAVE ANIMALS’ தலைப்பில் விநாயகர் சிலை!

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று (ஆக.27) சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் BBK Boys குழு சார்பில் Save animals என்ற தலைப்பில் வைக்கப்பட்டுள்ள வித்தியாசமான விநாயகர் சிலை, பக்தர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. விநாயகர் சிலைக்கு ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
News August 27, 2025
சேலம் சரகத்தில் 4,995 பள்ளிகளில் 3.46 லட்சம் மாணவர்களுக்கு பயன்!

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் சேலம் சரகத்தில் 4,995 பள்ளிகளைச் சேர்ந்த 3.46 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டம் குழந்தைகளின் ஊட்டச்சத்துக்கு வழிவகுத்துள்ளதாக கல்வியாளர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சேலம் மாவட்டத்தில் மட்டும் 1,501 பள்ளிகளில் 98,144 மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர்.
News August 27, 2025
சேலம்: 10-ம் வகுப்பு போதும்.. பயிற்சியுடன் ரூ.6,000!

சேலம் மக்களே 10, 12-ம் வகுப்பு, ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களா நீங்கள்? தமிழ்நாட்டில் ரயில்வேயில் தொழிற்பயிற்சி பெற வாய்ப்பு அமைந்துள்ளது. தெற்கு ரயில்வேயில் 3,518 பயிற்சி காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இதற்கு மாதம் ரூ.6,000 (10th), ரூ.7,000 (12th, ITI) உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <