News November 2, 2024
6ஆவது மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை

திருச்சியைச் சேர்ந்த முகமது உமர் (23), வண்டலூர் கிரசென்ட் கல்லூரியில் 3ஆம் ஆண்டு அறிவியல் படிப்பு படித்து வந்தார். விடுதியில் தங்கி படித்து வந்த அவர், இன்று விடுதியின் 6ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். பதறிப்போன சக மாணவர்கள் அவரை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News August 9, 2025
செங்கல்பட்டு: IT வேலை வேண்டுமா? சூப்பர் வாய்ப்பு

செங்கல்பட்டு இளைஞர்களே, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கும் விதமாக, தமிழக அரசு இலவச பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, Coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. இதற்கான வகுப்புகள் சென்னையில் நடைபெறுகிறது. இங்கே <
News August 9, 2025
செங்கல்பட்டு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை திறப்பு

செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தாம்பரம் சானடோரியம் பகுதியில் ரூ.145.41 கோடி செலவில் 400 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய மருத்துவமனையை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து, மருத்துவமனையின் உள் கட்டமைப்புகளை அவர் ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
News August 9, 2025
செங்கல்பட்டு: MRPஐ விட அதிக விலையா? இதை பண்ணுங்க

பேருந்து நிலையங்கள், சாலையோர மோட்டல்களில் உணவு பொருட்களை MRPஐ விட கூடுதல் விலை கொடுத்து வாங்கிருப்பீர்கள். அவ்வாறு விற்பது குற்றம். MRPஐ விட கூடுதல் விலைக்கு விற்பது, எக்ஸ்பயரி தேதி மாற்றி வைப்பது, வேறு ஸ்டிக்கரை அதன்மேல் ஒட்டி வைப்பது போன்றவற்றை கண்டால் FSSAIன் 9444042322 வாட்சப் எண்ணுக்கு புகார் செய்யலாம் (அ) மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் செய்யலாம். <<17350924>>தொடர்ச்சி<<>>