News November 2, 2024

சிறுத்தையை கண்காணிக்க கேமரா பொருத்தம்

image

ஸ்ரீவி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்துக்குள் சிறுத்தை ஒன்று நடமாடுவதாக பொதுமக்கள் தெரிவித்து வந்த நிலையில் தனியார் விவசாய தோப்பிற்குள் கட்டிப்போட்டு வைத்திருந்த கன்று குட்டி ஒன்றை மர்ம விலங்கு கடித்து குதறியுள்ளது. இந்நிலையில் நேற்று வனத்துறையினர் பசு கடித்த இடத்தில் கண்காணிப்பதற்காக கேமரா பொருத்தி உள்ளனர்.

Similar News

News October 22, 2025

சிவகாசி அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி!

image

சிவகாசி அருகே உள்ள செவளூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணசுப்பு மனைவி சின்னம்மாள் (வயது 65). இவர் வீட்டில் உள்ள டியூப்லைட் எரியாத நிலையில் அதனை சரி பார்க்க முயன்ற போது எதிர்பாராமல் மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு விருதுநகர் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சின்னம்மாளை பரிசோதனை செய்த டாக்டர், சின்னம்மாள் வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

News October 22, 2025

JUST IN விருதுநகர்: 5810 காலியிடங்கள் அறிவிப்பு

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. ஆரம்ப நாள்: 21.10.2025
4. கடைசி தேதி : 20.11.2025
5. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> CLICK HERE.<<>> ஷேர் பண்ணுங்க!

News October 22, 2025

விருதுநகரில் சோகம்… சுவர் இடிந்து விழுந்து கல்லுாரி மாணவி பலி

image

திருத்தங்கல் பழைய வெள்ளையாபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி மகள் பவானி 17. சிவகாசி தனியார் நர்சிங் கல்லுாரியில் படித்து வந்தார். தொடர் மழை பெய்து வருவதாலும் வீரமணியின் வீடு வாறுகாலை ஒட்டி அமைந்துள்ளதாலும் சுவர் பலவீனமடைந்துள்ளது. இருநாட்களுக்கு முன் காலை 10:00 மணிக்கு பவானி வீட்டில் இருந்த போது சுவர் இடிந்து விழுந்ததில் காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.

error: Content is protected !!