News March 19, 2024
சிஏஏ வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சிஏஏவுக்கு தடை கோரி தாக்கலான மனுக்கள் குறித்து 3 வாரத்திற்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு, மனுக்கள் விசாரணைக்கு வந்தன. மத்திய அரசு சார்பில், பதில் அளிக்க 4 வாரகாலம் அவகாசம் கோரப்பட்டது. இதைக்கேட்ட உச்சநீதிமன்றம், 3 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Similar News
News January 4, 2026
சற்றுமுன்: அதிமுகவில் அடுத்த பதவி பறிப்பு

அதிமுக வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த வி.எஸ்.பாபு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பணமோசடி, அடிதடி என இவர்மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்ததன் காரணமாக மா.செ., பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் திருமங்கலம் மோகனை மாவட்ட செயலாளராக நியமனம் செய்ததோடு, வி.எஸ்.பாபுவை அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக மாற்றி EPS உத்தரவிட்டுள்ளார்.
News January 4, 2026
இன்றே கடைசி.. SIR லிஸ்ட்டில் பெயர் இல்லையா

SIR லிஸ்ட்டில் பெயர் விடுபட்டு போனவர்கள், தங்களது பெயரை சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். ஆன்லைனில் அல்லது BLO-வை நேரில் சந்தித்து உங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளலாம். <<18628448>>ஆன்லைனில் <<>>விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும். தமிழ்நாட்டில் மொத்தம் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றே கடைசி நாள் என்பதால், நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News January 4, 2026
அதிமுக இடத்தை தவெக நிரப்பும்: மாணிக்கம் தாகூர்

அதிமுகவின் கடைசி பொ.செ.,வாக EPS இருப்பார் என கூறிய மாணிக்கம் தாகூர், அதிமுகவின் இடத்தை தவெக நிரப்பும் என கூறியுள்ளார். ஏனென்றால் தமிழகத்தில் பாஜகவுடன் எந்த கட்சி கூட்டணி வைத்தாலும், அந்தக் கட்சியும் சேர்ந்து தோல்வியடையும் என்றும் தெரிவித்தார். எம்ஜிஆர் படங்களை முதல் வரிசையில் அமர்ந்து பார்த்த செங்கோட்டையன், தற்போது விஜய்யின் ஜனநாயகனை விசில் அடித்து பார்க்கட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


