News March 19, 2024
உலகிலேயே அதிக காற்று மாசு கொண்ட தலைநகரம் டெல்லி

உலகில் அதிக காற்று மாசுயுடைய தலைநகராக டெல்லி இருப்பது தெரிய வந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் IQAir அமைப்பு, 2023ஆம் ஆண்டின் அதிக மாசடைந்த நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், காற்று மாசு அதிகமுள்ள நாடுகள் பட்டியலில், இந்தியா 3வது இடத்தில் உள்ளதென்றும், உலகில் அதிக மாசுயுடைய பெருநகராக பீகாரின் பெகுசராயும், அதிக மாசுயுடைய தலைநகராக டெல்லியும் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது
Similar News
News April 27, 2025
காஷ்மீர் இளைஞனின் உயிர் தியாகம்.. ஷிண்டே நிவாரணம்

பஹல்காம் தாக்குதலின் போது, சுற்றுலாவாசிகளை காப்பாற்ற முயன்று உயிரிழந்த குதிரை ஓட்டி ஹுசேன் குடும்பத்தினருக்கு ₹5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். ஹுசேனின் குடும்பத்தாருடன் வீடியோ காலில் பேசிய அவர், உங்களுடைய மகனின் தியாகம் வீண் போகாது என ஆறுதல் கூறினார். தீவிரவாதியிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்ற போது ஹுசேன் கொல்லப்பட்டார்.
News April 27, 2025
PAK-க்கு ஆதரவாக பேசிய இந்தியர்கள்!

பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் தெரிவித்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அசாம், திரிபுரா, மேகாலயாவில் மட்டும் இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக அசாமில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். MLA, செய்தியாளர், மாணவர்கள், வழக்கறிஞர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் என பல தரப்பினரும் கைதுக்கு உள்ளாகியுள்ளனர்.
News April 27, 2025
ரூட்டை மாற்றிய மஹிந்திரா.. ₹555 கோடிக்கு ஒப்பந்தம்!

SML Isuzu நிறுவனத்தின் 58.96% பங்குகளை ₹555 கோடிக்கு வாங்க உள்ளதாக மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. ஒரு பங்கை ₹650 என்ற விலையில் வாங்க உள்ளது. இதன்மூலம், 3.5 டன்களுக்கு மேலான வணிக வாகன உற்பத்தியில் அந்நிறுவனம் இறங்கியுள்ளது. இந்திய சந்தையில் பேருந்து, லாரி விற்பனையில் SML Isuzu நிறுவனம் முன்னணியில் உள்ளது. கடந்த 2024 நிதியாண்டில் அந்நிறுவனம் ₹2,196 கோடி வருமானம் ஈட்டியது.