News March 19, 2024
திமுகவுக்கு தூக்கம் தொலைந்துவிட்டது

இன்று சேலத்தில் நடைபெற்றிருக்கும் பாரதிய ஜனதா கட்சி பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி தமிழ்நாட்டில் எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவால் திமுகவுக்கு தூக்கம் தொலைந்துவிட்டது என்று பேசினார். மேலும் தமிழகத்தில் எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவு பற்றிதான் நாடு முழுவதும் உள்ள பேச்சாக இருக்கிறது என்று பேசினார் பிரதமர் மோடி.
Similar News
News August 22, 2025
மாமாங்கம் மேம்பாலம் இன்று பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது

சேலம்-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் மாமாங்கத்தில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்காக இன்று (ஆக.22) திறக்கப்பட்டது. இதனால் அந்த சாலை வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள்,லாரி,பேருந்து ஓட்டுநர்கள்,பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.புதிய மேம்பாலத்தால் போக்குவரத்து நெரிசல் அறவே குறையும் என எதிர்பார்ப்பு!
News August 22, 2025
விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம் அறிவிப்பு

பால் உற்பத்தி செய்ய கால்நடைகளுக்கான அடர் தீவனம், உலர் தீவனம்,பசுந்தீவனம் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.தமிழ்நாடு அரசு தற்போது வழங்கி வரும் பால் கொள்முதல் விலை,விவசாயிகளுக்கு கட்டுப்படியானதாக இல்லை.
பசும் பால் மற்றும் எருமைப் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.15 உயர்த்தி வழங்க வேண்டும்.செப்-22ல் சேலம் ஆவின் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தமிழக விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் ஆர்.வேலுசாமி அறிவிப்பு
News August 22, 2025
7.5% இட ஒதுக்கீடு: சேலத்தில் 1,903 பள்ளி மாணவர்கள் பயன்!

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறுவதற்காக, தமிழக அரசு 7.5% இட ஒதுக்கீட்டை வழங்குகிறது. இந்த இட ஒதுக்கீடு மருத்துவப் படிப்புகள் உட்பட அனைத்துப் பட்டப் படிப்புகளுக்கும் பொருந்தும். அதன்படி, சேலம் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் (2021-2025) 7.5% இட ஒதுக்கீடு மூலம் மொத்தம் 1,903 மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.