News March 19, 2024
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பணியிட மாற்றம்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 16 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி பொறியியல் பிரிவு பணிப்பார்வையாளர் , இளநிலை வரை தொழில் அலுவலர் நிலையிலான 16 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கயல்விழி ஆத்தூருக்கும் , கீதாலட்சுமி தலைவாசலுக்கும் பணியிடம் மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News October 24, 2025
சேலம்: தாட்கோ மூலம் இலவச பயிற்சி வகுப்புகள்!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது பயிற்சி சேர விருப்பம் உள்ளவர்கள் www.tahdco.comஇணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி வலியுறுத்தியுள்ளார்.
News October 24, 2025
சேலம்: உதவி தொகைக்கான கால அவகாசம் நீட்டிப்பு!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் சாதனையாளர்களுக்கான உதவித்தொகை பெற தேசிய உதவி கல்வித் தொகை பெறுவதற்காக இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இம்மாதம் இறுதிவரை 31-10-2025 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கல்லூரிகள் விண்ணப்பத்தை சரிபார்க்க 15-11-2025 வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
News October 24, 2025
சேலம்: எரிவாயு குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு!

சேலம் மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துவோர் குறைகளை தீர்ப்பதற்காக மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி நடப்பு மாதத்திற்கான எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துவோர் குறைதீர்க்க முகாம் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது நுகர்வோர்கள் தங்களது குறைகளை தீர்த்துக் கொள்ளலாம்.


