News November 1, 2024
அம்பத்தூர் முன்னாள் துணை தாசில்தார் மரணம்

அம்பத்தூர், பொன்னேரி, ஆவடியில் தாசில்தாராக பணியாற்றியவர் மணிகண்டன் (55). இவர், கடைசியாக கோயம்பேட்டில் உள்ள சி.எம்.டி.ஏ. அலுவலக சிறப்பு தாசில்தாராக பணியாற்றி வந்தார். தீபாவளி அன்று (அக்.31) நேற்று இரவு 7.30 மணி அளவில் அரியலூர் அருகே அவரது சொந்த ஊரில் குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்தபோது மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பலரும், இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News September 12, 2025
BREAKING: சென்னை போத்தீஸ் கடைகளில் ரெய்டு

சென்னை கிழக்கு கடற்கரை சாலை (ஈசிஆர்) நீலாங்கரையில் உள்ள போத்தீஸ் உரிமையாளரின் கடை மற்றும் மகன்கள் போத்தி ராஜா மற்றும் அசோக் ஆகிய இருவரின் ஈசிஆர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருவர் வீட்டில் 6 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகளின் குழு என 2 மகன்கள் வீட்டில் 12 வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை சுமார் முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
News September 12, 2025
JUST IN: சென்னை மெட்ரோ பணி ஊழியர் உயிரிழப்பு

சிவகங்கையைச் சேர்ந்த ஜெபஜல்தின் என்பவர் சென்னையில் மெட்ரோ ரயில் பணியில் ஊழியராக பணியாற்றி வந்தார். சூளைமேடு அப்துல்லா தெருவில் உள்ள பி.ஜி.ஹாஸ்டலில் தங்கி வந்த அவர், நேற்று நள்ளிரவு மது போதையில் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். தடுப்பு சுவர் இல்லாமை காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News September 12, 2025
சென்னையில் இன்று மின்தடை

சென்னையில் இன்று(செப்.12) மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், பாலவாக்கம், காமராஜர் சாலை (ம) மெயின் ரோடு, பூந்தமல்லி, நசரத்தேபட்டை, மேப்பூர், திருமங்கலம் மெட்ரோ சோன், பாடிகுப்பம் மெயின் ரோடு, காமராஜ் நகர், பெரியார் நகர், 100 அடி சாலை, எழும்பூர், ஈவிகே சம்பத் சாலை, சிஎம்டிஏ, மெரினா டவர், திருவேங்கடம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.